டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: மறுபரிசீலனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்ட விவகாரத்தில், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெங்கட் நாராயணாவின் நியமனம் தற்போது பல விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாத ஒருவரை இந்தப் பொறுப்பில் நியமித்தது சரியான நடவடிக்கை அல்ல. வெங்கட் நாராயணாவின் நியமனத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மிகவும் பொருத்தமான ஒருவரை முதல்வர் நியமிக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version