MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கோவிலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கோவிலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்
தமிழ்நாடு

கோவிலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்

Admin
Last updated: June 24, 2026 1:34 pm
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் உள்ள திருக்கோவில்களில் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், கண்டுகொள்ளப்படாமல் இடிந்த நிலையில் உள்ள கோவில்களை முதல்-அமைச்சர் விஜய்யின் ஆட்சியில் சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தி வழிபாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் தமிழ்நாட்டு மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி பெறும் வகையில் இருக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும், அங்கு 20-க்கும் மேற்பட்ட சேவைகள் பழைய கட்டணத்திலேயே நீடிக்கின்றன என்றும் அவர் விளக்கினார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நிர்வாக ரீதியாக சில முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால், அதனை சரிசெய்ய ஏற்கனவே கட்டண உயர்வை அதிகாரிகள் பரிசீலித்து வைத்திருந்தனர். அதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதே தவிர, கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.

பொதுமக்கள் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று சொன்னால், நாங்கள் உயர்த்தப்போவதில்லை என்றும், அவர்களின் கருத்தை மீறி இந்த அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்காது என்றும், பொதுமக்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படிதான் இந்த அரசாங்கம் நடக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதியளித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduஅமைச்சர் ரமேஷ்இந்து சமய அறநிலையத்துறைகட்டணம்கோவில்த.வெ.க.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை விமான நிலையத்தில் ரூ.53 லட்சம் தங்கப் பசை பறிமுதல்
Next Article பள்ளி மாணவர்களை வைத்து அரசியல்: வானதி சீனிவாசன் கேள்வி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5 பேர் மாயமாகியுள்ளனர். 17 பேர்…

June 24, 2026

அரசு மருத்துவர்கள் தனி தொழில் செய்ய தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்யக்கூடாது…

June 24, 2026

முட்டை நீக்கம்: மேற்கு வங்க மதிய உணவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

மேற்கு வங்கத்தில் அரசு பள்ளிகளின் மதிய உணவு…

June 24, 2026

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: கர்நாடகாவில் வாலிபர் கைது

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக…

June 24, 2026

போதைப்பொருள் ஒழிப்பு: தமிழக அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டி, கேரள…

June 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை: திருப்பூர் அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் சோபியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

ஈரோடு டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 4-வது நாளாக நீடிப்பு

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 4-வது நாளாக நீடிக்கிறது. காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நடைபெறும் இந்தப் போராட்டத்தால் மதுப்பிரியர்கள்…

1 Min Read
தமிழ்நாடு

69% இடஒதுக்கீடு: சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக் கொள்கை உச்ச நீதிமன்றத்தில் சவால்களை எதிர்கொள்வதை அடுத்து, சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. மக்களின் உரிமைகளை பாதுகாக்க…

2 Min Read
தமிழ்நாடு

த.வெ.க.வின் பலம் 120-ஆக உயர்ந்தது… வி.சி.க.வை தொடர்ந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது IUML

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்காக பெரும்பான்மையான 118 என்ற மேஜிக் நம்பரை பெறுவதற்கு தமிழக வெற்றிக்கழகம் முயற்சி மேற்கொண்டு வந்தது. தமிழ்நாடே உற்று பார்த்துக்கொண்டிருந்த வேளையில் நேற்று மாலை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?