MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது
தமிழ்நாடு

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது

Sri Prem Kumar R
Last updated: June 7, 2026 6:41 pm
Sri Prem Kumar R
Share
SHARE

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த நீல நிற சூட்கேஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த அந்த சூட்கேஸ் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூட்கேஸ் அதிக பாரமாக இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை திறந்து பார்த்தபோது, தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சிவப்பு நிற பாலிதீன் பையில் சுற்றப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த உடலின் கை, கால்கள் முழங்கால் வரை துண்டிக்கப்பட்டிருந்தன. உடல் சற்று அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை சூப்பிரண்டு ராஜன், சென்னை கோட்ட பாதுகாப்பு அதிகாரி ஜெயப்பிரகாஷ், புளியந்தோப்பு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

ரயில்வே பாதுகாப்பு படை மோப்பநாய் 'ஜான்சி' வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சூட்கேஸ் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த நாய், ரயில் நிலையத்தின் வெளிப்புறமாக ஓடி பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலைய நடைமேடையில் நின்றுவிட்டது. தலை, கை, கால்கள் இல்லாத வாலிபர் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஆட்டோவில் வந்த இருவர், தலை, கை, கால்கள் இல்லாத உடலை சூட்கேசில் அடைத்து வைத்துவிட்டு தப்பிச் சென்றது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் அமீர் அலி என்பதும், உடலை கொண்டு வந்து போட்டது அவரது மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது. கைதான இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Peramburகொலைசடலம்சென்னைபெரம்பூர்ரயில் நிலையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டில் 24×7 ஆன்லைன் பத்திரப்பதிவு: இனி வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்!
Next Article மம்தா பானர்ஜிக்கு வழிவிட யூசுப் பதான் ராஜினாமா? எம்பி மறுப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: த.வெ.க.வில் இணைப்பு!

அதிமுகவைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். இதனால் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரவுள்ளது. முதல்வர் விஜய் எம்.ஜி.ஆர். மரபை முடிவுக்குக் கொண்டுவர முயல்வதாக…

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் – பிரேமலதா பேட்டி

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் இன்று சட்டசபைக்கு வருகை தந்து…

1 Min Read
தமிழ்நாடு

சொகுசு பஸ்ஸில் தவெக எம்.எல்.ஏ.க்கள்: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

தமிழக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. மாமல்லபுரத்தில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்தில் சட்டசபைக்கு வந்தனர்.…

1 Min Read
தமிழ்நாடு

பரமக்குடியில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு: 2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு ஐ.டி.ஐ. எதிரே உள்ள பகுதியை சேர்ந்தவர், முகமது ரிபைதின்(வயது 28). இவர் பரமக்குடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?