தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் ரூ.15,000-க்கும் மேல் குறைந்து நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதல் அளித்தது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் தணிந்ததும், டாலரின் மதிப்பு சீராக இருப்பதும் கூறப்படுகிறது.
பொதுவாக, டாலரின் மதிப்பு குறையும் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி அதில் முதலீடு செய்வார்கள். ஆனால், சமீப காலமாக டாலரின் மதிப்பு வலுப்பெற்று வருவதால், முதலீட்டாளர்கள் குறுகிய கால லாபத்தை நோக்கமாகக் கொண்டு டாலர்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தங்கம் விலை குறைந்துள்ளது.
நேற்று (ஜூன் 25) மட்டும் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,05,120-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13,140 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,30,000 ஆகவும் இருந்தது. இது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்தது.
ஆனால், இன்று (ஜூன் 26) நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,05,760-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.13,220 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 அதிகரித்து ரூ.2,35,000 ஆகவும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிந்த நிலையில், இன்று திடீரென உயர்ந்துள்ளது நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.