MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திமுகவினர் கொள்ளையடித்த பணத்தை திருப்பி தர வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு சவால்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > திமுகவினர் கொள்ளையடித்த பணத்தை திருப்பி தர வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு சவால்
தமிழ்நாடு

திமுகவினர் கொள்ளையடித்த பணத்தை திருப்பி தர வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு சவால்

Admin
Last updated: June 26, 2026 10:05 am
Admin
Share
SHARE

திமுகவினருக்கு மனசாட்சி இருந்தால், தாங்கள் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று 'ஜோஹோ' நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சவால் விடுத்துள்ளார். பள்ளி விவகாரம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்து, தமிழக அரசுக்கு உதவுவதற்காக தான் கூறிய பொய் என திமுகவினர் தாக்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கலைவாணி கல்வி மையம்' என்ற அமைப்பின் கீழ் தென்காசி மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் தலா ஒரு இலவச NIOS பள்ளி நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தேனியில் உள்ள பள்ளியை முதலில் ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி நடத்தி வந்ததாகவும், ஆனால் தடையின்மைச் சான்றிதழ் வழங்க மாநில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் அவரால் பள்ளியைத் தொடர முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தென்காசியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக DTCP அனுமதி கோரி விண்ணப்பித்தபோது, திமுக ஆட்சியில் இருந்தவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும், ஆட்சி மாறியதும் அனுமதி கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த DTCP ஒப்புதல் தொடர்பாகத்தான் தான் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும், எந்த ஒப்புதலுக்காகவும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று அரசு கூறியதை பொதுவெளியில் பாராட்ட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது குணநலன்களுக்கு திமுகவினரின் சான்றிதழ் தேவையில்லை என்றும், தொழில்நுட்பத்தில் மூழ்கியிருக்கும் தன்னைப்போன்றவர்கள் ஏன் இவற்றைப் பதிவிட வேண்டும் என்று திமுகவினர் தங்கள் மனசாட்சியை ஆராய்ந்து கேட்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தான் ஏதுமில்லாமல் வளர்ந்தவன் என்றும், கிராமப்புறங்களுக்கு புத்துயிர் அளித்து, பாரதத்தை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடைய செய்வதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திமுகவினரின் தாக்குதல்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்றும், அவர்களுக்கு மனசாட்சி இருந்தால் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஊழல்கல்விதமிழ்நாடுதிமுகஸ்ரீதர் வேம்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article போதைப்பொருள் ஒழிப்பில் 15 காவலர்களுக்கு முதல்வர் பதக்கம்
Next Article தங்கம் விலை திடீர் உயர்வு: நகை வாங்குவோர் அதிர்ச்சி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்: டாக்டர்கள் பாராட்டு

தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்ணை மருத்துவர்கள் பாராட்டினர். பாம்பை…

June 26, 2026

மகனை இழந்த தந்தை வேதனை: திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே – புனே வழக்கு

புனேவில் இளம் தொழிலதிபர் கேதன் விஷால் கொலை…

June 26, 2026

கங்கை-காவிரி இணைப்பு: வளர்ச்சியைத் தடுக்க முடியாது – சந்திரபாபு நாயுடு

கோதாவரி - காவிரி நதிகளை இணைக்கும் திட்டத்தை…

June 26, 2026

தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சிறுமி உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவின் நாசிக்கில், நாய் கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட…

June 26, 2026

மக்களின் நம்பிக்கையே பலம் – ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்று…

June 26, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் பேச்சைக் கேட்டு திமுக வெளியேறியது – அமைச்சர் செங்கோட்டையன்

முதல்-அமைச்சர் தனது உரையை முடிக்கும் முன்பே, எதிர்கட்சி தலைவர் உதயநிதி உட்பட தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அவையை விட்டு வெளியேறியதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த…

1 Min Read
இந்தியா

தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

ஜூன், ஜூலை மாதங்களுக்குத் தேவையான 40 டிஎம்சி காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து…

1 Min Read
தமிழ்நாடு

ஜெயலலிதாவின் படத்தை பார்த்து அழுதபடியே பதவியேற்ற எம்.எல்.ஏ.

தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டசபைக்கு புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்று வருகின்றனர்.…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய வக்பு சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான்

உமித் போர்ட்டலில் வக்பு சொத்துக்களைப் பதிவேற்றம் செய்வதில் உள்ள சவால்கள் காரணமாக, தமிழகத்தில் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படாது என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?