MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுகவில் பிளவு: கே.சி.வீரமணி திடீர் ஆதரவு – ஈ.பி.எஸ்.க்கு ஷாக்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அதிமுகவில் பிளவு: கே.சி.வீரமணி திடீர் ஆதரவு – ஈ.பி.எஸ்.க்கு ஷாக்!
தமிழ்நாடு

அதிமுகவில் பிளவு: கே.சி.வீரமணி திடீர் ஆதரவு – ஈ.பி.எஸ்.க்கு ஷாக்!

Admin
Last updated: May 15, 2026 2:23 pm
Admin
Share
SHARE

அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி தலைமையில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, சட்டமன்றத்தில் திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். இவருக்கு ஆதரவாக 25 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிரடி முடிவால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கே.சி.வீரமணி எம்.எல்.ஏ.வை திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக டாக்டர் பசுபதி புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கே.சி.வீரமணி ஜோலார்பேட்டையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய கே.சி.வீரமணி, '21 ஆண்டுகளாக அதிமுகவில் பணியாற்றி, அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் என பல பொறுப்புகளை வகித்தேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுகவுடன் கூட்டணி வைக்குமாறு பொதுச்செயலாளர் கூறுவது மன வருத்தத்தை அளிக்கிறது. கடந்த தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் டெபாசிட் கூட பெறவில்லை. மக்களின் பணிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில், ஆளும் கட்சியுடன் இணைந்தால் தான் சாத்தியம் என்பதால் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தேன். நான் உயிருள்ளவரை அதிமுக தொண்டன்தான், என் சின்னம் இரட்டை இலை, என் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். கட்சி பதவியில் இருந்து நீக்கப்படுவேன் என தெரிந்தும் இந்த முடிவை எடுத்தேன்' என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளருடன் அனைவரும் பயணிக்க வேண்டும். நானும் கட்சி பதவியை விட்டு, அதிமுக தொண்டனாக அவருடன் இணைந்து கட்சியை வளர்க்க பாடுபடுவேன். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முன்பு திமுக கோட்டையாக இருந்தது. நான் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, தொண்டர்களின் உழைப்பால் அதிமுக கோட்டையாக மாறியது. புதிய மாவட்ட செயலாளருக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அதிமுகதான் எனக்கு முக்கியம். எடப்பாடிதான் எங்கள் தலைவர். அவர் பின்னால் தான் இருக்கிறோம். இதுதான் எங்கள் நிலைபாடு. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியுடன் பயணிப்போம்' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:AIADMKEdappadi PalaniswamiTamil Nadu Politicsஅதிமுககே.சி.வீரமணிதமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எடமேலையூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் 5ஆம் ஆண்டு குருபூஜை: சிறப்பு யாகத்துடன் பக்தர்கள் வழிபாடு
Next Article புதுவையில் அக்னி நட்சத்திரத்திலும் இடி மின்னலுடன் கனமழை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்த புதிய முதலமைச்சர் சதீசன்!

கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து…

May 15, 2026

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் பதவி ஏற்பு: வீட்டில் இருந்து புறப்பட்டார் திரிஷா

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன்…

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க. ஆட்சிக்கு எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உரையாற்றினார். அதிமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில் மக்கள் இரட்டை இலை…

1 Min Read
தமிழ்நாடு

‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் எப்போதும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் நாட்டுப்பண்ணும் இசைக்கப்படுவது வழக்கம். இச்சூழலில் நேற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற

2 Min Read
தமிழ்நாடு

தங்கம், வெள்ளி சுங்கவரி உயர்வு: உடனடியாக திரும்பப் பெறுக – செல்வப்பெருந்தகை

தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். விலைவாசி உயர்வால் ஏற்கனவே சிரமப்படும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?