MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ரூ.180 கோடி போதைப்பொருள்: அமலாக்கத்துறை சோதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - ரூ.180 கோடி போதைப்பொருள்: அமலாக்கத்துறை சோதனை

அரசியல்

ரூ.180 கோடி போதைப்பொருள்: அமலாக்கத்துறை சோதனை

Admin
Last updated: மே 27, 2026 11:04 காலை
Admin
Share
SHARE

சென்னை: கடந்த மார்ச் 1, 2024 அன்று சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டைக்கு சென்ற பொதிகை ரயிலில், மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.180 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பிலோமன் பிரகாஷ், வியாசர்பாடி சாஸ்திரி நகரைச் சேர்ந்த யேசுராஜ் (39) உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட யேசுராஜ், இந்த கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளார். சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கியதும், இதில் பல சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதி, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கத்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில், அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். வழக்கிற்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், வியாசர்பாடி சாஸ்திரி நகரில் யேசுராஜின் வீடு, அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஜான் பிரிட்டோவின் வீடு, மற்றும் பிலோமன் பிரகாஷின் வீடு ஆகிய மூன்று இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையை ஒட்டி, அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், வழக்கு தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Drug SeizureED Raidஅமலாக்கத்துறைசென்னைசோதனைபோதைப்பொருள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவில்பட்டி அருகே பட்டாசு விபத்து: 2 பேர் உயிரிழப்பு
Next Article இன்ஸ்டாகிராம் காதல்: கடிதம் எழுதிவிட்டு மாயமான மாணவி மீட்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையில் இன்று மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் இன்று பராமரிப்புப் பணிகளுக்காக சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும். பணிகள் முடிந்ததும் மின்சாரம் வழங்கப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சிக்கன் பர்கரில் புழு? கோவை உணவகத்தில் அதிகாரிகள் சோதனை!

கோவை சிக்கன் பர்கரில் புழுக்கள் காணப்பட்டதாக வெளியான வீடியோவை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரபல உணவகம் ஒன்றில் அதிரடியாக சோதனை நடத்தினர். இது பெரும் பரபரப்பை…

1 Min Read
அரசியல்

தமிழக புதிய டிஜிபி: யுபிஎஸ்சி பரிந்துரைத்த 3 பேர் யார்?

தமிழகத்தின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபி பதவிக்கு ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 அதிகாரிகளின் பட்டியலை மத்திய பணியாளர்…

1 Min Read
அரசியல்

ராமேசுவரம் கோயில் லட்டு விவகாரம்: ரூ.3.40 கோடி மோசடி, 6 ஊழியர்கள் நீக்கம்!

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இலவச லட்டு பிரசாத விற்பனையில் ரூ.3.40 கோடி மோசடி நடந்ததை அடுத்து 6 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?