MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சென்னையில் 445 கிலோ குட்கா பறிமுதல் – ஆட்டோவில் கடத்தி விநியோகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - சென்னையில் 445 கிலோ குட்கா பறிமுதல் – ஆட்டோவில் கடத்தி விநியோகம்

க்ரைம்

சென்னையில் 445 கிலோ குட்கா பறிமுதல் – ஆட்டோவில் கடத்தி விநியோகம்

Admin
Last updated: மே 10, 2026 9:58 காலை
Admin
Share
SHARE

சென்னையில் ஆட்டோவில் குட்கா கடத்தி விநியோகித்து வந்த நபரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த 445.5 கிலோ குட்கா புகை யிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், மாநகரம் முழுவதும் போதைப் பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர், அரும் பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, ஆட்டோவில் இருந்த மூட்டைகளில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த வெற்றிவேல் (45) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தலைமறை வாக உள்ள சில நபர்களின் அறி வுறுத்தலின் பேரில், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இலகுரக சரக்கு வாகனத்தில் (மினி லாரி) இருந்து குட்கா மூட்டைகளை ஆட்டோவுக்கு மாற்றி, நகரின் வேறு பகுதிக்கு விநியோகம் செய்ய முயன்றது தெரிய வந்தது.

பின்னர், அங்கு சென்று அந்த சரக்கு வாகனத்தையும், அதிலிருந்த குட்கா புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய மூட்டைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில்,மொத்தம் 445.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், நடைபெற்ற விசாரணையில் பிடிபட்ட வெற்றிவேல் மீது ஏற்கனவே திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் குட்கா கடத்தல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இந்த கடத்தல் சம்பவத்தில் பின்னணியில் உள்ள முக்கிய நபர் களையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை: Tuck செய்து மிடுக்காக வந்து இறங்கினார் விஜய்
Next Article CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

க்ரைம்

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் சோகம்: மின் கசிவால் இளைஞர் பலி!

‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் மின் கசிவு ஏற்பட்டதில், பணியில் ஈடுபட்டிருந்த சேலத்தைச் சேர்ந்த இளைஞர் கார்த்திகேயன் (29) பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

1 Min Read
க்ரைம்

செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது

சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய் மோசடி செய்த மருத்துவமனை ஊழியர் ஒருவரை ஆவடி மத்திய…

1 Min Read
க்ரைம்

12 பவுன் நகை மோசடி: கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கைது

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள கூட்டுறவு வங்கியில், விவசாயிகளிடம் 12 பவுன் நகைகளை பெற்றுக்கொண்டு, பணத்தை வழங்காமல் மோசடி செய்த வங்கி செயலாளர் மற்றும் எழுத்தர்…

1 Min Read
க்ரைம்

காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை? ஆணவக்கொலையா? தந்தையிடம் போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கீற்று கொட்டகையில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது ஆணவக்கொலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?