MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: யூடியூப் பார்த்து பிரசவம்: ரத்தப்போக்கால் தாய் பலி – திருப்பூர் சோகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > யூடியூப் பார்த்து பிரசவம்: ரத்தப்போக்கால் தாய் பலி – திருப்பூர் சோகம்
தமிழ்நாடு

யூடியூப் பார்த்து பிரசவம்: ரத்தப்போக்கால் தாய் பலி – திருப்பூர் சோகம்

Admin
Last updated: June 29, 2026 7:33 am
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டத்தில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததில், தாய் சசிகலா (32) ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைசாமி – சசிகலா தம்பதியினருக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு மகள் உள்ளார். முதல் பிரசவம் சி-செக்ஷன் மூலம் நடந்த நிலையில், அதன்பின் ஏற்பட்ட முதுகு வலி மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் ஆங்கில மருத்துவத்தின் மீது அதிருப்தி அடைந்த சசிகலா, இரண்டாவது பிரசவத்தை இயற்கையாக வீட்டிலேயே பார்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இரண்டாவது முறை கர்ப்பமான சசிகலா, கர்ப்ப காலத்தில் ஒருமுறை கூட மருத்துவமனைக்குச் சென்று வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. உறவினர்கள் வற்புறுத்தியும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துள்ளார். மாறாக, இணையதளத்தில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கான வழிமுறைகளைத் திட்டமிட்டு வந்துள்ளார்.

கடந்த 23-ஆம் தேதி இரவு சசிகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போதும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததால், யூடியூப் வழிகாட்டுதலின்படி வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. கடந்த 24-ஆம் தேதி அதிகாலை 5.42 மணியளவில் சசிகலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே சசிகலாவுக்கு கடுமையான மற்றும் கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயக்கமடைந்துள்ளார்.

மயக்கமடைந்த சசிகலாவை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள ராயல் கேர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:தமிழ்நாடுதாய் மரணம்திருப்பூர்பிரசவம்யூடியூப்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவை 1 ரன்னில் வீழ்த்தி அயர்லாந்து தொடர் வெற்றி!
Next Article பெரும்பான்மைக்கு குதிரை பேரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம் நிரம்பி வருகிறது. மதுபான விற்பனையானது…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

நேபாளத்தில் தவித்த 52 இந்திய யாத்ரீகர்கள் மீட்பு

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்ற 52…

June 29, 2026

அயோத்தி ராமர் கோவில் வணிகமயம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவில் ஆன்மிக மையமாக இருக்க…

June 29, 2026

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை சந்தித்த முக்கிய பிரமுகர்கள்: தலைமைச் செயலகத்தில் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன நிர்வாகிகள், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

குழந்தைக்கு ‘தமிழ் வெற்றிக் கொண்டான்’ என முதலமைச்சர் விஜய் பெயர் சூட்டினார்

முதலமைச்சர் விஜய், எம்.எல்.ஏ பல்லவியின் குழந்தையை அன்புடன் தூக்கி கொஞ்சி, 'தமிழ் வெற்றிக் கொண்டான்' எனப் பெயர் சூட்டி முத்தமிட்டார். இந்த பாசமிகு செயலைக் கண்டு எம்.எல்.ஏ…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 4 தொகுதிகள் காலியான நிலையில் இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில்

தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாகியுள்ளன. ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியும் காலியாக இருந்த நிலையில், தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பை தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ராஜினாமா

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த திடீர் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?