MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வை ரத்து செய்: இளைஞர் காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வை ரத்து செய்: இளைஞர் காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - நீட் தேர்வை ரத்து செய்: இளைஞர் காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்!

அரசியல்

நீட் தேர்வை ரத்து செய்: இளைஞர் காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்!

Admin
Last updated: மே 18, 2026 9:29 காலை
Admin
Share
SHARE

சென்னையில் நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றும் முறைகேடுகளை கண்டித்து, தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூர்யா பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கணக்கான இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள், எழும்பூரிலிருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட தயாராக இருந்த 'வந்தே பாரத்' ரயிலை மறித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மத்திய பாஜக அரசை கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தியும் கைகளில் பதாகைகளை ஏந்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால், நெல்லை வந்தே பாரத் ரயில் சுமார் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து சூர்யா பிரகாஷ் கூறுகையில், 'மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் அரங்கேறி வருகின்றன. வினாத்தாள் கசிந்ததன் காரணமாக, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில், போட்டி தேர்வுகளின் வினாத்தாள்கள் 80-க்கும் மேற்பட்ட முறை கசிந்துள்ளன. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் நமது மாணவ, மாணவியரை தேர்வு மைய வாசலில் வைத்து பாதுகாப்பு என்ற பெயரில் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்குகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் சிறிய கம்மல், கொலுசு போன்ற நகைகளைக் கூட கழற்றச் சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். ஆனால், வட மாநிலங்களிலோ வினாத்தாள்கள் மிக சாதாரணமாக தொடர்ந்து கசிந்து வருகின்றன. எனவே, தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான தேசிய தேர்வு முகமையை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்த வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்' என்றார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET ExamTamil Nadu Politicsஇளைஞர் காங்கிரஸ்நீட் தேர்வுரயில் மறியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமெரிக்க விமான கண்காட்சியில் நடுவானில் மோதிய 2 போர் விமானங்கள்: 4 விமானிகள் தப்பினர்!
Next Article 300 பெண் கால்நடை மருத்துவர்கள் குடும்பம் காக்க கோரிக்கை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தலைமை செயலக புகார் பெட்டி அகற்றம்: பழைய நடைமுறை அமல்

சென்னை தலைமை செயலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி, பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அகற்றப்பட்டுள்ளது. பழைய நடைமுறையே மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

1 Min Read
சினிமா

முதல்வர் முடிவுகளில் தலையிடாதீர்கள்: நடிகர் அருண் விஜய் வேண்டுகோள்!

முதல்-அமைச்சரின் முடிவுகளில் தலையிட வேண்டாம் என்றும், அவரது முடிவுகளை மதித்து பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்றும் நடிகர் அருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியிட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 Min Read
அரசியல்

பள்ளிகள் அருகே தொடர் சோதனை: போதைக்கு எதிராக ஆணையர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த பள்ளிகள், கல்லூரிகள் அருகே தொடர் சோதனை நடத்தவும், ரகசிய தகவல் வலைப்பின்னலை உருவாக்கவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?