MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: வேல்முருகன் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: வேல்முருகன் கண்டனம்

லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: வேல்முருகன் கண்டனம்

Admin
Last updated: ஜூன் 8, 2026 12:57 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். திண்டிவனம் அருகே சலூன் கடை உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது, திருச்சியில் ரவுடி பாதுஷா ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டது, சிவகங்கை மாவட்டத்தில் தவெக நிர்வாகி நவீன் குமார் மதுபானக் கடையில் கொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தில் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது, சிவகங்கை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 12 மற்றும் 15 வயது சிறார்கள் கைது, சென்னை பெரம்பூரில் மனைவியே கணவனை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது, திருநெல்வேலி அருகே பொது இடத்தில் மோதலில் 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்டது போன்ற சம்பவங்களும் தமிழகத்தின் பாதுகாப்பற்ற நிலையை உணர்த்துவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்ததாக காங்கிரஸ் நிர்வாகி நடராசன் கைது, ஈரோட்டில் சட்டவிரோதமாக மது, புகையிலை விற்பனை செய்த 5 பேர் கைது, திருச்சி பாலக்கரை பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் 9 பேர் கைது, சேலம் மேட்டூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய தவெக நிர்வாகி கைது, கிருஷ்ணகிரி அருகே 85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிய நபர் தேடப்படுவது என தொடர் குற்றச் சம்பவங்கள் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளன.

குற்றவாளிகள் பகலில், பொது இடங்களில் கொலை செய்யும் அளவுக்கு தைரியம் அதிகரித்துள்ளதாகவும், காவல்துறை அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் குற்றங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் வெற்று அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுவதாகவும் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். உடனடியாக முதல்வர் தலைமையில் சட்டம்-ஒழுங்கு குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும், குற்றப் பின்னணி உள்ளவர்கள் மீது கண்காணிப்பு, காவல் நிலையங்களில் மக்கள் அச்சமின்றி புகார் அளிக்கும் சூழல், கொலை, கொள்ளை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இல்லையென்றால் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம்போல சட்டம்-ஒழுங்குக்கும் மக்கள் போராடும் நிலை உருவாகும் என்றும் எச்சரித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crime in Tamil NaduTamil Nadu Law and Orderசட்டம் ஒழுங்குதமிழ்நாடு அரசியல்வேல்முருகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டாக்ஸிக் படத்தின் அசத்தல் BTS வீடியோ வெளியீடு!
Next Article தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான் உறுதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஆணையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: காலை 7 மணிக்குள் கள ஆய்வு!

நகராட்சி ஆணையர்களுக்கு ககன்தீப் சிங் பேடி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தினசரி காலை 7 மணிக்குள் கள ஆய்வு செய்து, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளை உறுதி…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வீட்டில் ஓடும் குதிரை சிலை: வைக்கலாமா? – வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?

வீட்டில் ஓடும் குதிரை சிலை வைப்பது தன்னம்பிக்கையையும், நேர்மறை சிந்தனையையும் ஊக்குவிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின்படி இது நல்லதா கெட்டதா என்பதைப் பார்ப்போம்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மதுரையில் நீட் வினாத்தாள் வாகனம் பழுது: பரபரப்பு

மதுரையில் நீட் தேர்வு வினாத்தாள்களை ஏற்றிச் சென்ற வாகனம் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாற்று வாகனம் மூலம் வினாத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்பு

சென்னை: முதல்வர் விஜய்யுடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?