MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ

இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ

Admin
Last updated: மே 24, 2026 7:45 காலை
Admin
Share
SHARE

புதுடெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கான இறக்குமதி வரிகளை உயர்த்தினார். மேலும், அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கை மற்றும் ஹெச்1பி விசா கட்டண உயர்வு ஆகியவை இந்தியா – அமெரிக்கா இடையே உறவில் விரிசலை ஏற்படுத்தின. இதனால் அதிபர் ட்ரம்ப்புடனான சந்திப்பை பிரதமர் மோடி தவிர்த்தார். பின்னர், இந்தியா மீதான வரியை அமெரிக்கா குறைத்தது, இது இரு தரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது.

இந்தச் சூழலில், இருதரப்பு உறவுகளைச் சீரமைக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நேற்று இந்தியா வந்தார். தனது முதல் பயணமாக கொல்கத்தா சென்ற அவர், புனித அன்னை தெரசாவின் ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி' அமைப்பின் தலைமையகமான ‘மதர் ஹவுஸ்'-க்குச் சென்றார். அதன் பின்னர், நேற்று மாலை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர்.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, எரிசக்தி பாதுகாப்பு, கல்வி, ராணுவம் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது, பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு, இரு நாட்டு மக்கள் இடையேயான தொடர்பு, மேற்கு ஆசியா நிலவரம் ஆகியவை குறித்து பிரதமர் மோடியுடன் மார்கோ ரூபியோ விரிவாக ஆலோசனை நடத்தினார். பின்னர், பிரதமர் மோடியை அமெரிக்கா வருமாறு அதிபர் ட்ரம்ப் சார்பில் அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், 'அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை வரவேற்றதில் மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரம் குறித்து ஆலோசித்தோம். உலக நன்மைக்காக இரு நாடுகளும் எப்போதும் இணைந்து செயல்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:US India Relationsஅமெரிக்காஇந்தியாபிரதமர் மோடிமார்கோ ரூபியோவெளியுறவுத்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பள்ளிக்கல்வித்துறை: காலை 10 மணிக்குள் அலுவலகம் வர அதிரடி உத்தரவு
Next Article சென்னையில் நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

பேராசிரியை தற்கொலை: ஆண் நண்பர் கைது

சென்னை அண்ணா நகரில் பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவருக்கு தற்கொலைக்கு தூண்டியதாக அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். தீவிர…

1 Min Read
இந்தியா

பிரதமர் மோடி: இந்தியாவின் லட்சியங்கள் எல்லைகளைத் தாண்டும்!

நெதர்லாந்து சென்றடைந்த பிரதமர் மோடி, இந்தியாவின் லட்சியங்கள் எல்லைகளைத் தாண்டும் என்றும், உலக அரங்கில் இந்தியா முன்னணி வகிக்கும் என்றும் தெரிவித்தார்.

1 Min Read
இந்தியா

உ.பி.யில் கனமழை: 31 பேர் பலி! மீட்புப் பணி தீவிரம்

உத்தரப்பிரதேசத்தில் கனமழை மற்றும் சூறாவளிக்காற்று காரணமாக 31 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 Min Read
இந்தியா

மணிப்பூரில் பதற்றம்: 3 தேவாலய தலைவர்கள் சுட்டுக்கொலை – தேசிய நெடுஞ்சாலை முடக்கம்

மணிப்பூரில் 3 தேவாலய தலைவர்கள் ஆயுதக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, முக்கிய தேசிய நெடுஞ்சாலை 2 முடக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மேலும் விசாரணை…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?