சென்னையில் நாளை (24.05.2026) மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த மின்தடை நீடிக்கும். பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டைப் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதில் சிட்கோ தொழிற்பேட்டை, செக்டர் 3-இல் உள்ள 1வது குறுக்கு பிரதான சாலை, 1 மற்றும் 2வது லேன், 2 மற்றும் 3வது தெரு, பஜனை கோவில் தெரு, நல்ல கிணறு தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, குள்ளன் தெரு, பாடசாலை தெரு, கோரமண்டல் டவுன், சி.டி.எச். சாலை, மேனாம்பேடு சாலை, சிட்கோ தொழிற்பேட்டை 10 மற்றும் 11வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம் ஆகிய பகுதிகள் அடங்கும்.
மேலும், முகப்பேர் பகுதியிலும் மின்தடை ஏற்படும். இதில் 2வது பிரதான சாலை, ரெட்டிப்பாளையம் பிரதான சாலை, முகப்பேர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர் சாலையில் பின்புறம் உள்ள C19, C18, C15 மற்றும் C16 பகுதிகள், அம்பத்தூர் தொழிற்பேட்டை (தெற்கு பகுதி) ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் பாதிக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் இந்த மின்தடை குறித்த தகவல்களை அறிந்து அதற்கேற்ப தங்களது பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின் பகிர்மானக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிந்து மின் விநியோகம் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.