MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ
இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ

Admin
Last updated: May 24, 2026 7:45 am
Admin
Share
SHARE

புதுடெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கான இறக்குமதி வரிகளை உயர்த்தினார். மேலும், அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கை மற்றும் ஹெச்1பி விசா கட்டண உயர்வு ஆகியவை இந்தியா – அமெரிக்கா இடையே உறவில் விரிசலை ஏற்படுத்தின. இதனால் அதிபர் ட்ரம்ப்புடனான சந்திப்பை பிரதமர் மோடி தவிர்த்தார். பின்னர், இந்தியா மீதான வரியை அமெரிக்கா குறைத்தது, இது இரு தரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது.

இந்தச் சூழலில், இருதரப்பு உறவுகளைச் சீரமைக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நேற்று இந்தியா வந்தார். தனது முதல் பயணமாக கொல்கத்தா சென்ற அவர், புனித அன்னை தெரசாவின் ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி' அமைப்பின் தலைமையகமான ‘மதர் ஹவுஸ்'-க்குச் சென்றார். அதன் பின்னர், நேற்று மாலை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர்.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, எரிசக்தி பாதுகாப்பு, கல்வி, ராணுவம் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது, பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு, இரு நாட்டு மக்கள் இடையேயான தொடர்பு, மேற்கு ஆசியா நிலவரம் ஆகியவை குறித்து பிரதமர் மோடியுடன் மார்கோ ரூபியோ விரிவாக ஆலோசனை நடத்தினார். பின்னர், பிரதமர் மோடியை அமெரிக்கா வருமாறு அதிபர் ட்ரம்ப் சார்பில் அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், 'அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை வரவேற்றதில் மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரம் குறித்து ஆலோசித்தோம். உலக நன்மைக்காக இரு நாடுகளும் எப்போதும் இணைந்து செயல்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:US India Relationsஅமெரிக்காஇந்தியாபிரதமர் மோடிமார்கோ ரூபியோவெளியுறவுத்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பள்ளிக்கல்வித்துறை: காலை 10 மணிக்குள் அலுவலகம் வர அதிரடி உத்தரவு
Next Article சென்னையில் நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் யாருக்கு லாபம்? – மோடிக்கு கார்கே கேள்வி

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் யாருக்கு லாபம்? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

1 Min Read
உலகம்

ஈரானுடன் ஒப்பந்தம்: அவசரம் வேண்டாம் – டிரம்ப் அறிவுறுத்தல்

ஈரான்-அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரம் காட்ட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். இரு தரப்பும் உரிய நேரத்தை…

1 Min Read
இந்தியா

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார் கோவை மூத்த வழக்கறிஞர் மோகனா

கோவை மூத்த வழக்கறிஞர் வி.மோகனா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இவர் நீதிபதி பானுமதியை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் செல்லும் இரண்டாவது பெண்மணி ஆவார்.

1 Min Read
இந்தியா

VIDEO: சலூன் கடையாக மாறிய வங்கி ஏடிஎம்.. இது பீகார் வினோதம்!

பீகாரில் SBI வங்கி ஏடிஎம் ஒன்று சலூனாக மாற்றப்பட்ட வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் தானாப்பூர் பகுதியில் உள்ள ரூபாஸ்பூர் என்ற…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?