சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 162 அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வழக்கறிஞர்கள், கடந்த திமுக ஆட்சியின் போது நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த அரசு வழக்கறிஞர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படும் வரை, அவர்கள் தொடர்ந்து பணியில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். தற்போது, திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட இந்த வழக்கறிஞர்களின் ராஜினாமாவை அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு பிளீடர் எட்வின் பிராபகர், 24 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், 36 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், மற்றும் 54 அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமாவும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு பிளீடர் பி.திலக்குமார், 9 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், 16 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், மற்றும் 21 அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமாவும் ஏற்கப்பட்டு, இது தொடர்பாக பொதுத்துறை அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்துள்ளார்.