MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தமிழ்நாடு

திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

Admin
Last updated: மே 12, 2026 8:29 மணி
Admin
Share
SHARE

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார் தலைமையில், ஏ.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோருக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை நிலை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய கடுமையான நடவடிக்கைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மற்றும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நீதிமன்றப் பணிகள் மற்றும் பிற நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு முன்னதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையின் இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர பணிக்குச் செல்லும் இருசக்கர வாகனங்கள், உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவை முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என எஸ்.பி. ஆய்வு செய்தார். அப்போது, வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியதுடன், வாகனங்களின் நிறைகுறைகளையும் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் சாட்சிகளை விரைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தவர்கள், நீதிமன்ற விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவர்கள், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களைத் திறம்பட கைது செய்தவர்கள் என மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 62 காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கிப் பாராட்டினார். இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அரசு வழக்கறிஞர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: டெல்லிக்கு திரில் வெற்றி, பஞ்சாப் கிங்ஸ் மீண்டும் தோல்வி – சூடுபிடிக்கும் டாப் 4 போட்டி
Next Article அமெரிக்கா மீண்டும் தாக்கினால் யுரேனிய செறிவூட்டலை 90% ஆக உயர்த்துவோம் – ஈரான் கடும் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளிக்கிறார்

இவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அவை மிகவும் பாதுகாப்பானவை…

ஆகஸ்ட் 24, 2026

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி: குடலை உருவி பையில் போட்ட கொடூரம்!

சென்னையில் கணவனை கொடூரமாக கொலை செய்து, குடல்களை…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

ஆகஸ்ட் 24, 2026

புதுச்சேரியில் 10 மலிவு விலைக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் ஏழை, நடுத்தர மக்களைக் காக்க 10…

ஆகஸ்ட் 24, 2026

செப்.5ல் சிஜேபி பேரணி: மத்திய அரசுக்கு கண்டனம்

ஜூலை 25 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

வறண்டு காணப்படும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
தமிழ்நாடு

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

போதிய மழைப்பொழிவு இல்லாததால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி வறண்டு காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சின்னச்சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்: அடிப்படை வசதிகள் கோரிக்கை

தேனி மாவட்டம் சின்னச்சுருளி அருவியில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாததால் பெண்கள் சிரமப்படுவதாகவும், வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

வீடியோ எடுத்தது ஊடகங்கள்: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

சிவகாசி அரசுப் பள்ளியில் காணப்பட்ட அவலநிலை குறித்த வீடியோவை ஊடகங்களே எடுத்தன என்றும், அரசியல் என்பது உண்மைகளை மறைப்பதல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே முக்கியம் என்றும் அமைச்சர்…

2 Min Read
பவானியில் பெண் குழந்தை பிறந்ததால் பாட்டி குழந்தையை கொன்ற சம்பவம்
தமிழ்நாடு

பெண் குழந்தை பிறந்ததால் பாட்டி கொடூரம்: பச்சிளம் குழந்தை கொலை

ஈரோடு மாவட்டம், பவானியில் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த பாட்டி, பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் பாட்டியை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?