MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வீடியோ எடுத்தது ஊடகங்கள்: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வீடியோ எடுத்தது ஊடகங்கள்: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வீடியோ எடுத்தது ஊடகங்கள்: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

தமிழ்நாடு

வீடியோ எடுத்தது ஊடகங்கள்: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

Admin
Last updated: ஜூலை 6, 2026 9:30 மணி
Admin
Share
அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளிக்கும் காட்சி
அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களுக்கு விளக்கம் அளிக்கிறார்
SHARE

சிவகாசி அரசுப் பள்ளியில் காணப்பட்ட அவலநிலை குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, "அந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை, ஊடகங்கள்தான் பதிவு செய்தன" எனத் தெரிவித்துள்ளார். அரசியல் என்பது உண்மைகளை மறைப்பதல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்!" எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். கழிப்பறை வசதி, உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் இல்லாமலும், பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டிக்கிடந்த நிலையிலும் அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது? என அவர் வினவினார்.

இன்றைய நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள். நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், கடமையுமாகும் என்றும் அவர் விளக்கினார்.

மேலும், தான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள் என்றும், இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே தன்னைப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தானே நேரடியாக அனுபவித்திருப்பதாகவும், அதனால்தான் இந்த மாணவர்களின் எதிர்காலம் தனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ஆகவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி; அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி! என அவர் சுட்டிக்காட்டினார்.

தன் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலிலும், மாண்புமிகு தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என அமைச்சர் கீர்த்தனா உறுதியளித்தார். அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான் என அவர் தனது விளக்கத்தை நிறைவு செய்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Government SchoolsTamil Nadu Politicsஅமைச்சர் கீர்த்தனாஅரசுப்பள்ளிஅன்பில் மகேஷ் பொய்யாமொழிசிவகாசிபள்ளிக்கல்வித்துறைராஜ்மோகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article யமஹா R2 பைக் அறிமுகம் யமஹா R2: KTM, ஹீரோவுக்கு சவால் விடும் புதிய பைக்!
Next Article நடிகர் அருண் விஜய் தனது 38வது படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் காட்சி 38வது படத்திற்காக உடலை தயார் செய்யும் நடிகர் அருண் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

சேர்வலாறு அணையில் நீர்மட்டம் உயர்வு
தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை ஒரே நாளில் 6 அடி உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

தனுஷ் குடும்பத்தின் அடுத்த வாரிசு: ‘லவ் ஓ லவ்’ ஜூலை 10ல் வெளியீடு!

தனுஷின் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக களமிறங்கும் பவிஷ் நடித்துள்ள 'லவ் ஓ லவ்' திரைப்படம் வரும் ஜூலை 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு…

1 Min Read
அமைச்சர் தலைமையில் நடைபெற்ற வருகையில்லா ஆவணப்பதிவு குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
தமிழ்நாடு

ஆவணப்பதிவில் புதிய புரட்சி: அமைச்சர் தலைமையில் முக்கிய கூட்டம்

பதிவுத்துறையில் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருகையில்லா ஆவணப்பதிவு முறை அறிமுகம். அமைச்சர் தலைமையில் முக்கிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

2 Min Read
தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு பலகை அல்லது ரயில் நிலையம்
தமிழ்நாடு

5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வேயின் அறிவிப்பின்படி, நாகர்கோவில் - கோயம்புத்தூர், இராமேஸ்வரம் - திருப்பதி, இராமேஸ்வரம் - கன்னியாகுமரி, மற்றும் சென்னை - திருப்பதி இடையேயான 5 விரைவு ரயில்களில்…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?