தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலையை விடுங்கள். இரவில் எட்டு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் கொள்வது பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். இந்த பதிவில், தூக்கமின்மையைப் போக்கி நல்ல பலனைப் பெறக்கூடிய சில எளிய வழிகளைப் பார்ப்போம்.
தற்கால இளைய தலைமுறையினர் செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களை இரவில் அதிகமாகப் பயன்படுத்துவதால், சீக்கிரமாகத் தூங்கச் செல்வதில்லை. இதனால் கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். இந்த தூக்கமின்மையிலிருந்து விடுபட, இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை உடல் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நமது ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும்.
நன்றாகத் தூங்குவதால் நுரையீரல் சக்தி பெற்று இயங்கும், சிறுகுடல் சீராகச் செயல்படும். இரவில் சரியாகத் தூங்கவில்லையென்றால், அஜீரணக் கோளாறு, அல்சர், வயிற்றில் கட்டிகள், ஏன் புற்றுநோய் கூட வர வாய்ப்புள்ளது. எனவே, நிம்மதியான உறக்கம் மிகவும் அவசியம்.
தூக்கமின்மையைப் போக்க சில எளிய வழிகள்: இரவில் தூங்கச் செல்லும் முன் உங்களுக்குப் பிடித்த புத்தகத்தைப் படிக்கலாம். இது நிச்சயம் நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். மேலும், மஞ்சள் கலந்த பால் குடிப்பது நல்ல பலனைத் தரும். சிலர் இரவில் தேநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இரவில் குளிப்பது ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும். தினமும் தூங்கச் செல்லும் முன் மூச்சுப் பயிற்சி செய்வது தூக்கமின்மையைப் போக்கி நல்ல பலனைத் தரும்.