MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தூத்துக்குடியில் நண்பர் வெட்டி கொலை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தூத்துக்குடியில் நண்பர் வெட்டி கொலை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்

தமிழ்நாடு

தூத்துக்குடியில் நண்பர் வெட்டி கொலை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்

Admin
Last updated: மே 14, 2026 6:41 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி, தாளமுத்துநகர் அருகே மேட்டுப்பட்டி உமயம்மாள் கோவில் அருகே மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் மீனவர் ஸ்னோவின் (26) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் சூசை படுகாயமடைந்தார்.

நேற்று இரவு, ஸ்னோவின் மற்றும் அவரது நண்பர் சூசை ஆகியோர் கடலுக்கு சென்றுவிட்டு, மேட்டுப்பட்டி உமயம்மாள் கோவில் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தனராஜ் (எ) பாண்டி (20), முத்துக்குமார் (எ) கருப்பு (20) மற்றும் அவர்களுடன் மேலும் 2 பேர் என மொத்தம் 4 பேர் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி, ஆத்திரமடைந்த சந்தனராஜ், முத்துக்குமார் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சேர்ந்து ஸ்னோவினை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற நண்பர் சூசைக்கும் தலையில் கத்திக்குத்து விழுந்தது.

தாக்குதல் நடத்திய 4 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஸ்னோவின் மற்றும் சூசை ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்னோவின் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சூசைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 4 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crime NewsThoothukudi murderகொலைதமிழ்நாடு செய்திகள்தூத்துக்குடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய ‘ஏ’ அணிக்கு வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல் வாய்ப்பு!
Next Article டெல்லி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் வீட்டிலிருந்து பணி: புதிய அறிவிப்புகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கொளுத்தும் வெயில்: கோவையில் வேகமாக சரியும் அணைகளின் நீர்மட்டம்- விவசாயிகள் கவலை

கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும்…

2 Min Read
தமிழ்நாடு

தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு? – திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா?

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு…

1 Min Read
தமிழ்நாடு

ஸ்ரீகர் பிரசாத்துக்கு ஆஸ்கர் குழுவில் இடமளிப்பு: தென்னிந்திய படத்தொகுப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

இந்திய சினிமாவின் முன்னணி எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத், ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக தென்னிந்திய படத்தொகுப்பாளர் சங்கம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்: கடும் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பி வாழும் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?