MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழகத்தில் அரிசி விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகத்தில் அரிசி விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!

தமிழ்நாடு

தமிழகத்தில் அரிசி விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!

Admin
Last updated: ஜூன் 30, 2026 8:34 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.10 வரை விலை ஏற்றம் கண்டுள்ளது. இது மக்களை அடுத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழகத்தில் தற்போது 21 லட்சம் டன் அரிசி பற்றாக்குறை நிலவுகிறது. இதை ஈடுசெய்யும் விதமாக, ஆண்டுக்கு 30 லட்சம் டன் உயர் ரக சன்ன அரிசி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு கர்நாடகாவில் ஏற்பட்ட மழைப் பற்றாக்குறை காரணமாக, உயர் ரக சன்ன நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், லாரி வாடகை கட்டணம் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாலும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த பருவத்தில் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. கோடை மழை மற்றும் தற்போதைய பருவமழை பொய்த்துப் போனதால், கோடை மகசூல் மற்றும் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக, கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடியை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், அரிசி ஆலைகளுக்கான மின்சார நிலை கட்டணம் கடந்த ஆட்சியில் ரூ.5,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டது. ஆலைகள் இயங்காத போதும் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டியிருப்பதால், அந்த செலவினமும் அரிசி விலையில் சேர்க்கப்படுகிறது. இதனால், வரும் காலங்களில் அரிசி விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் கூறுகையில், 'கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து அதிகளவில் சன்ன ரக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில் நெல் இருப்பு குறைவாக இருப்பதால், அங்குள்ள ஆலைகளின் தேவைக்குப் போகவே எங்களுக்கு நெல் கிடைக்கிறது. சில மாதங்களில், ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளது. லாரி வாடகையும் உயர்ந்துள்ளது. அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் சீரக சம்பா அரிசி, கடந்த ஏப்ரல் மாதம் ரூ.84-க்கு விற்றது. தற்போது ரூ.180-க்கு விற்கப்படுகிறது. ஓராண்டில் கிலோவுக்கு ரூ.96 விலை உயர்ந்துள்ளது. வறட்சி, மழைப்பொழிவு இல்லாதது மற்றும் சன்ன ரக நெல் உற்பத்தி குறைந்ததால், அரிசி விலை மேலும் அதிகரிக்கும்' என்று தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Rice Price HikeTamil Naduஅரிசி விலைதமிழக செய்திகள்விலை உயர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாஸ்போர்ட் முதல் ஆதார் வரை கட்டணம் உயர்வு – நாளை முதல் அமல்!
Next Article முதல்வர் விஜய் ஜூலை 10-ல் கரூர் பயணம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8 லட்சம் ரூபாய் வரை நன்கொடை…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை: மக்கள் அச்சம்

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் சட்டவிரோத மது விற்பனை: 16 பேர் கைது!

சென்னையில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 439 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் முக்கிய பொறுப்புகள்: ராஜலெட்சுமி நியமனம்!

அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாக எம்எல்ஏ சுகுமார், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜி. சுப்பிரமணியன், கே.சி. பழனிச்சாமி ஆகியோரும், மகளிர் அணி இணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர்…

1 Min Read
தமிழ்நாடு

மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் மதுரா ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலிலும் காணிக்கை திருட்டு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?