தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மின்தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த தாக்கம் இருக்கும்.
சென்னையில் சோத்துப்பெரும்பேடு, பல்லாவரம், பஞ்செட்டி, தில்லை கங்கா நகர், ராமாபுரம் போன்ற பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, குமரன் நகர், செங்கலம்மன் நகர், விஜயநல்லூர், சிறுணியம், பார்த்தசாரதி நகர், விஜயா கார்டன், பழைய சந்தை, பம்மல் பிரதான சாலை, அப்துல் பாரூக் தெரு, காமராஜர் நெடுஞ்சாலை, தெய்வசிகாமணி தெரு, முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், அரங்கநாதன் தெரு, தேவராஜன் தெரு, சோழன் தெரு, இஸ்ரோ விருந்தினர் மாளிகை, ரேடியன்ஸ், தேர்வாய்கண்டிகை, சிப்காட், கோபால் ரெட்டி, பொள்ளனூர், புதுநகர், கரடிபுத்தூர், புத்தூர், என்.எம். கண்டிகை, கண்ணன்கோட்டை, பாஞ்சாலை, அமரம்பேடு, அக்ரஹாரம், தாணிப்பூண்டி, பெரியபுலியூர், சிறுவாடா, பூவலம்பேடு, சரஸ்வதி நகர், கல்கி நகர், விநாயகபுரம், ஏஜிஎஸ் காலனி 4வது முதல் 10வது பிரதான சாலைகள் வரை, ஆண்டாள் நகர் 2வது மற்றும் 3வது பிரதான சாலைகள், எஸ்தெல் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகள், டிஆர்ஏ சல்மா அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ரெடிங்டன் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, சுங்கம், கலெக்ட்ரேட், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், அறிவொளி நகர், சேராபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, எச்.ஆர்.கோட்டை, ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம் ஆகிய பகுதிகளில் மின் தடை அமலில் இருக்கும். தேனி, தருமபுரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்தடையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் இந்த அறிவிப்பால், குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனால், அன்றாடப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க திட்டமிட்டு செயல்படுவது அவசியமாகும்.