தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் பல மாநில அமைச்சர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படும் யூடியூபர் மரிதாஸ், மதுரையில் சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பாரதிய நியாய சம்ஹிதாவின் (பி.என்.எஸ்) 79 மற்றும் 353(2) பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66D பிரிவின் கீழும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை, அழகர்கோயில் பிரதான சாலையில் உள்ள TWAD நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஜூன் 8, 2026 அன்று காலை சுமார் 10.10 மணியளவில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாரிதாஸ் பேசியதிலும் எழுதியதிலும் பிழைகள் இருக்கலாம், சட்ட மீறல்களும் இருக்கலாம். அதற்காக அவர் மீது வழக்குகள் கூட பதிவு செய்யலாம்.
ஆனால், அவரை அதிகாலையில் கைது செய்தது அவசியமா என்பதே கேள்வி என யூடியூபர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தப்பி ஓடி விடுவார், தடயங்களை அழித்து விடுவார், சாட்சிகளை கலைத்து விடுவார் போன்ற சூழல்களில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல், அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரை அதிகாலையில் கைது செய்வது உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன வேறுபாடு? உங்களை தவறாக வழிநடத்தும் பலர் உங்களுடன் இருக்கிறார்கள், கவனமாக இருங்கள் முதல்வரே என்றும் சவுக்கு சங்கர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.