இந்திய தேர்தல் ஆணையம், பீகார், மத்திய பிரதேசம், குஜராத் மாநில சட்டசபைகளில் காலியாக உள்ள பாங்கிபூர், ததியா, மஞ்சல்பூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. ஜூலை 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஆகஸ்டு 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி, அவர் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ளது. மேலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளும் காலியாக உள்ளன.
இந்த 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு அறிவிப்பு வராதது மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், தமிழகத்தில் இடைத்தேர்தல் சற்று தாமதமாக நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடத்த 6 மாதங்கள் அவகாசம் உள்ளதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை செயலகம், 7 தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தும், தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அறிவிப்பு வராதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.