தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி ஸ்டைலான டிசைன்களில் சைக்கிள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்களின் வடிவமைப்பை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல வண்ணங்களில், புதிய மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளில் சைக்கிள்களை வழங்குவதற்கான தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டிலேயே புதிய டிசைன் சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. தரமானதாகவும், மாணவர்களைக் கவரும் வகையிலும் சைக்கிள்கள் இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் அரசு நிதியுதவி பெறும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் பிரதீப் குமார், சைக்கிள் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார்.
You Might Also Like
காவிரி நீர்: சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் வேண்டும் – மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
சம்பா சாகுபடிக்காவது உடனடியாக காவிரி நீர் திறந்துவிடப்பட வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக அமைச்சர் பேச்சு மாநிலங்களுக்கு இடையே விரிசலை…
1 Min Read
தொகுதி மறுவரையறை: தவறான கருத்து பரப்பப்படுவதாக தவெக விளக்கம்
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் குறைந்தபட்ச புரிதல் இல்லாமல் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக தவெக விளக்கம் அளித்துள்ளது. மக்கள்தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க…
2 Min Read
36 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய அரசியலை கணித்த சோ ராமசாமி!
36 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய தமிழக அரசியலை கணித்த சோ ராமசாமி. திமுக, அதிமுக கைகோர்த்து ஆட்சி அமைக்கும் முயற்சி குறித்த பரபரப்பு தகவல்கள்.
2 Min Read
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்பாங்களா? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்!
தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். மேலும், தமிழக அரசின் பட்ஜெட் குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
2 Min Read
