மாணவர்களுக்கு ஸ்டைலான சைக்கிள்கள்: முதல்வர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி ஸ்டைலான டிசைன்களில் சைக்கிள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்களின் வடிவமைப்பை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல வண்ணங்களில், புதிய மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளில் சைக்கிள்களை வழங்குவதற்கான தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டிலேயே புதிய டிசைன் சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. தரமானதாகவும், மாணவர்களைக் கவரும் வகையிலும் சைக்கிள்கள் இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் அரசு நிதியுதவி பெறும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் பிரதீப் குமார், சைக்கிள் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version