MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சிவகங்கை: ஆடு மேய்க்கச் சென்ற மாணவி சடலம்: மர்ம மரணம்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சிவகங்கை: ஆடு மேய்க்கச் சென்ற மாணவி சடலம்: மர்ம மரணம்?

தமிழ்நாடு

சிவகங்கை: ஆடு மேய்க்கச் சென்ற மாணவி சடலம்: மர்ம மரணம்?

Admin
Last updated: மே 16, 2026 10:00 காலை
Admin
Share
SHARE

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே, மேலப்பூங்குடி கிராமத்தில் சோகம் சூழ்ந்துள்ளது. ராஜராஜசோழன் என்பவரின் மகள் அபிநயா, 12 வயதான இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த அபிநயா, நேற்று முன்தினம் தனது தாயுடன் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார்.

ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, சிறுமியின் தாய் வீட்டிற்குச் சென்றதாகவும், சிறுமி அபிநயா மட்டும் ஆடுகளை கவனித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், மாலை வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஆடுகள் மட்டும் தனியாக வீடு திரும்பியதால், என்ன நடந்திருக்கும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல்வேறு இடங்களில் சிறுமியைத் தேடிப் பார்த்தனர்.

பல மணி நேரத் தேடலுக்குப் பிறகும் அபிநயா கிடைக்காத நிலையில், அப்பகுதியில் உள்ள ஊருணியில் சிறுமியின் சடலம் மிதப்பதாக தகவல் வெளியானது. உடனடியாக கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, அது அபிநயாதான் என்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக மதகுபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை ஊருணியில் இருந்து மீட்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமி எப்படி உயிரிழந்தார், இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, அவரது மரணத்திற்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:News TodaySivagangaTamil Nadu Newsசிவகங்கைமர்ம மரணம்மாணவி மரணம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிக்கிம் மாநில தின வாழ்த்து: கவர்னர் ஆர்.என். ரவி பெருமிதம்!
Next Article விஜய்க்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து! மக்கள் எதிர்பார்ப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் கரூர் பயணம்: ஜூலை 10, 11-ல் மக்கள் சந்திப்பு

தமிழக முதல்வர் விஜய் ஜூலை 10 மற்றும் 11 தேதிகளில் கரூர் செல்கிறார். அங்கு த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கடந்த முறை கூட்ட நெரிசல்…

1 Min Read
தமிழ்நாடு

இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மழையில் நனையும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் வேதனை

கும்பகோணம் அருகே, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் விளைபொருட்கள்…

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோவை இன்று சந்திக்கிறார்

தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று கூடிய நிலையில், முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை இன்று…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?