MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பார்வதியை சமாதானப்படுத்தும் சிவன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - ஆன்மிகம் - பார்வதியை சமாதானப்படுத்தும் சிவன்

ஆன்மிகம்

பார்வதியை சமாதானப்படுத்தும் சிவன்

Admin
Last updated: மே 12, 2026 5:28 மணி
Admin
Share
SHARE

சூரியனின் தேரை ஓட்டும் அருணன், உடல் குறைபாடு கொண்டவர். திருக்கயிலாய மலைக்குச் சென்று சிவ-பார்வதியை தரிசிக்க வேண்டும் என்பது அவரது ஆசை. இந்த விருப்பத்தைச் சூரியனிடம் அருணன் தெரிவித்தபோது, சூரியன் அனுமதி மறுத்ததுடன், அருணனின் ஊனமான காலைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், சூரியனின் ஒளியைப் பறித்தார்.

தனது தவறை உணர்ந்த சூரியன், கயிலாயம் வந்து சிவ-பார்வதியை வணங்கி சாப விமோசனம் வேண்டினார். அப்போது ஈசன், 'என்னையும், உமையவளையும் யானை மீது அமர்த்தி, மேக மண்டலத்தில் இருந்தபடி ஏழு மாதங்கள் பூஜித்து வா. உனக்கு விமோசனம் கிடைக்கும்' என்று அருளினார். அதன்படி பூஜித்து வந்த சூரியன், ஏழு மாதங்கள் முடிவதற்கு முன்பாகவே, ஈசனிடம் வந்து 'என்னுடைய சாபம் இன்னும் நீங்கவில்லையே' என்று முறையிட்டார்.

இதைக் கேட்டு கோபமடைந்த பார்வதிதேவி, 'உரிய காலம் வரும்வரை உன்னால் பொறுமையாக இருக்க முடியாதா?' என்று கேட்டு, சாபம் கொடுக்க முயன்றார். அப்போது சிவபெருமான், பார்வதிதேவியிடம், 'தேவி… நான் ஏற்கெனவே அளித்த சாபத்தால் சூரியன் ஒளியை இழந்துள்ளான். இதனால் உலகம் இருளில் மூழ்கியுள்ளது. இப்போது நீயும் சாபமிட்டால், உலக உயிர்களின் துயரம் மேலும் அதிகரிக்கும். எனவே அமைதியாக இரு' என்று கூறினார்.

இந்தத் தல வரலாற்றைக் கொண்ட ஆலயமாக, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமீயச்சூர் மேகநாதர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலின் விமானத்தின் கீழே, தெற்குப் பகுதியில், மேலே குறிப்பிட்ட சம்பவத்தை நினைவூட்டும் வகையில் சிவ-பார்வதி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தை 'ஷேத்திர புராணேஸ்வரர்' என்று அழைக்கிறார்கள். இதில் சிவபெருமான், தனது மனைவி பார்வதியின் முகவாயைப் பிடித்து, அமைதியாக இருக்கும்படி கொஞ்சிக் கேட்பது போன்ற சிற்பம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தின் அழகை வேறு எந்த ஆலயத்திலும் காண இயலாது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகை ரோஜாவின் மகள் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் விருது பெற்று சாதனை
Next Article த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களிப்போம்: எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற கட்டிடம்

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

You Might Also Like

ஆன்மிகம்

கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய திருவிழா: தேர் பவனி ஜூலை 6ல்

நாகை மாவட்டம் கருங்கண்ணியில் புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா தொடங்கியது. தேர் பவனி ஜூலை 6 அன்று நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

1 Min Read
ஆன்மிகம்

சீர்காழியில் வைகாசி மாத சிறப்பு கோபூஜை: பக்தர்கள் பரவசம்!

சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோவிலில் வைகாசி மாத பிறப்பையொட்டி நடைபெற்ற கோபூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பசுக்களுக்கு வழிபாடு செய்தனர்.

1 Min Read
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் நம்பெருமாள்: ஆளும் பல்லக்கில் சித்திரை வீதியுலா!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் நிறைவு நாளான நேற்று, நம்பெருமாள் சிறப்பு 'ஆளும் பல்லக்கு' வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

1 Min Read
ஆன்மிகம்

14.5.2026 ராசிபலன்: இன்று யாருக்கு புகழ் கூடும்? முழு விவரம்!

14 மே 2026 அன்று மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான பலன்கள்! யாருக்கு புகழ் கூடும், யாருக்கு செலவுகள் அதிகரிக்கும்? முழு விவரம் இதோ.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?