MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஊரக வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் முக்கிய ஆய்வு கூட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஊரக வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் முக்கிய ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் முக்கிய ஆய்வு கூட்டம்

Admin
Last updated: மே 27, 2026 6:55 மணி
Admin
Share
SHARE

தமிழக முதல்வர் ஆணையின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முக்கிய திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ஊரகப் பொருளாதார வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படை என அமைச்சர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

ஊரக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் இத்துறையின் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு அமைச்சர் பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்றும், திட்டங்களை செயல்படுத்துவதில் எந்தவித தாமதமும் இன்றி கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திட்டங்களின் தரத்தில் எந்தக் குறைபாடும் இருக்கக்கூடாது, சாலைகள் மற்றும் பாலங்கள் தரத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து தூய்மையான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, குப்பைகளை 100% அகற்றுவதையும், திடக்கழிவு மேலாண்மையையும் உறுதி செய்ய வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். வண்டல் மண் இலவசமாக வழங்கப்படும் அறிவிப்பின் பயன் அனைவருக்கும் கிடைக்குமாறும், புகார்களுக்கு இடமளிக்காவண்ணம் பணிகளை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார். தெருக்கள் தூய்மையாக பராமரிக்கப்படுவதையும், தெருவிளக்குகள் முறையாக செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். சிறுசிறு பணிகளுக்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வாய்ப்பு வழங்கி பயிற்சி அளிக்க வேண்டும். பணிகளின் தரத்தை உறுதி செய்ய உள்ளூர் இளைஞர்களைக் கொண்ட குழுக்களைப் பயன்படுத்தலாம். அனைத்து பணிகளையும் வீடியோ பதிவு செய்து, பில் செட்டில் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு செயலாளர் பிரசாந்த் எம். வடனேரே, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் பா.பொன்னையா, இ.ஆ.ப., மற்றும் பல்வேறு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Rural DevelopmentTamil Naduஅமைச்சர் ஆனந்த்ஊரக வளர்ச்சிதமிழ்நாடுதிட்ட ஆய்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடியிடம் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்!
Next Article அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் திடீர் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் திடீரென ஓய்வு அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2011-ல் அறிமுகமான…

1 Min Read
தமிழ்நாடு

விஜய்க்குத் தேவை மேலும் 6 எம்.எல்.ஏ-க்கள்: 117 என்ற இலக்கை எட்டுமா தவெக?

தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் இரண்டாவது முறை சந்தித்த பிறகும் ஆட்சி அமைக்க அழைக்கப்படாத நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்க அவருக்கு மேலும் 6 எம்எல்ஏக்கள்…

2 Min Read
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்ததை கண்டித்து பேசிய தா.மோ. அன்பரசன்
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்க்கு தா.மோ. அன்பரசன் எச்சரிக்கை: திட்டங்களை மறைத்தால் போராட்டம் வெடிக்கும்!

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்ததை கண்டித்து, அதிமுக அரசை தா.மோ. அன்பரசன் விமர்சித்தார். திட்டங்களை மறைத்தால் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை…

3 Min Read
தமிழ்நாடு

மத்திய அரசின் பால் புரஸ்கார் விருது: சாதனை குழந்தைகளுக்கு அழைப்பு

மத்திய அரசின் பால் புரஸ்கார் விருதுக்கு சாதனை படைத்த குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்கள்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?