MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்திய கிரிக்கெட் சரியான திசையில் – ரோகித் சர்மா நம்பிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்திய கிரிக்கெட் சரியான திசையில் – ரோகித் சர்மா நம்பிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்திய கிரிக்கெட் சரியான திசையில் – ரோகித் சர்மா நம்பிக்கை

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் சரியான திசையில் – ரோகித் சர்மா நம்பிக்கை

Admin
Last updated: மே 24, 2026 12:26 மணி
Admin
Share
SHARE

இந்திய கிரிக்கெட் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அணியின் செயல்பாடுகள் மற்றும் வீரர்களின் மனநிலை என இரு தளங்களிலும் இந்த முன்னேற்றம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். உலக கிரிக்கெட்டில் இந்தியா ஒரு வலுவான சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதே தனது முக்கிய நோக்கம் என்றும், அதற்கான சரியான இடத்தில் இந்தியா இருப்பதாக அவர் நம்புவதாகவும் ரோகித் சர்மா குறிப்பிட்டார்.

மும்பை இந்தியன்ஸ் நடத்திய ESA தின நிகழ்வில் பேசிய ரோகித், 'இந்தியா உலக கிரிக்கெட்டின் மாபெரும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. இந்தியாவின் கடந்த மூன்று ஆண்டு கால பங்களிப்புகள் அசாத்தியமானவை. 2024 உலகக் கோப்பை, மகளிர் உலகக் கோப்பை, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் மற்றொரு டி20 உலகக் கோப்பை என பல்வேறு தொடர்களில் அணி சிறப்பாக விளையாடியுள்ளது. எங்களின் வெற்றிக்கான பயணத்தைத் தொடர்வோம் என நம்புகிறேன்' என்று உற்சாகத்துடன் கூறினார். இந்தியாவின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும், வயதுப் பிரிவுகளிலும் கிடைத்த வெற்றிகள், நாட்டின் துடிப்பான கிரிக்கெட் கட்டமைப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.

தனது அறிமுகக் காலத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றங்களையும் ரோகித் சர்மா விளக்கினார். 'நாங்கள் விளையாடத் தொடங்கிய காலகட்டத்தில், 130-140 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோராகக் கருதப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் அது சவாலானது. இப்போது எந்த ஒரு ரன் இலக்கும் போதுமானதாக இல்லை. இது காலப்போக்கில் இந்த விளையாட்டு எப்படி மாற்றமடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது' என்று தெரிவித்தார். மேலும், 'வீரர்கள் மிகுந்த தைரியத்துடனும், திறந்த மனதுடனும் செயல்படுகிறார்கள். இது விளையாட்டு மற்றும் லீக் போட்டிகளுக்கு ஒரு நல்ல அறிகுறி. அவர்கள் பழைய பழைமைவாத நுட்பங்களுக்குள் முடங்காமல், ஒரு படி மேலே சென்று சவால்களை எதிர்கொள்ளத் தயங்குவதில்லை. எதிர்வரும் ஆண்டுகளிலும் இதேபோன்ற அணுகுமுறை தொடரும், இது விளையாட்டை இன்னும் பெரிய தளத்திற்குக் கொண்டு செல்லும்' என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆறு வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் உள்ளனர் என்பதை நான் அறிவேன். அவர்களின் வாழ்க்கையின் இவ்வளவு ஆரம்ப காலகட்டத்தில் அதிக அழுத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் விளையாட்டை ரசிக்க வேண்டும், நண்பர்களுடன் பார்க்கவும் விளையாடவும் வேண்டும். இதுதான் எனக்கும் தொடங்கியது. சூழ்நிலையின் தேவையை உணர்ந்து விளையாட்டை அனுபவிப்பதே முக்கியம். எதையும் செய்யும்படி ஒருவர் உங்களை வற்புறுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார். 'நான் அறிமுகமானதில் இருந்து இன்றுவரை, கற்றுக்கொள்ள நிறைய சூழ்நிலைகள் இருந்தன. இதிலிருந்து நான் எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கான பல வழிமுறைகளை உணர்ந்தேன். விளையாட்டில் எப்போதுமெ ஒரு சீரான பயணம் கிடையாது. சிகரங்கள் மட்டுமல்ல, சரிவுகளும் நிறைய கற்க உதவுகின்றன' என்று அவர் விளக்கினார். இந்திய மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, அணியின் இலக்கே மிக முக்கியம் என்பதை உறுதிப்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்துகொண்டேன். ஒருவர் கேப்டனாக இருக்கும்போது அது வேறு கதை. ஏனெனில் நீங்கள் உங்கள் செயல்திறனைப் பற்றி மட்டும் கவலைப்பட தேவையில்லை. மற்ற வீரர்களின் செயல்திறனையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் சதம் அடித்திருந்தாலும், மற்றவர்கள் சரியாக விளையாட முடியாமல் அணி ஆட்டத்தை இழந்தால் அது கவலையளிக்கும். முடிவுகள் சாதகமாக வரும் வரை உங்களுக்கு நிம்மதி கிடைக்காது' என்று ரோகித் சர்மா விளக்கினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketIndian CricketRohit Sharmaஇந்திய கிரிக்கெட்கிரிக்கெட்ரோகித் சர்மா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article படப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் பரிதாப பலி
Next Article சவுகார்பேட்டை நகைக்கடை அதிபர் வீட்டில் ரூ.5.25 லட்சம், 25 பவுன் திருட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிபிஎஸ்இ லோகோ அல்லது பள்ளி வகுப்பறை காட்சி

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக்கான உள் மதிப்பீட்டுத்…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

You Might Also Like

விளையாட்டு

பிளே-ஆப் வாய்ப்பை வலுப்படுத்துமா பெங்களூரு? கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை

நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதும் ஆட்டத்தில், பெங்களூரு அணி தனது பிளே-ஆப்…

2 Min Read
விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து: நெதர்லாந்து அணிக்கு முதல் வெற்றி!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில், ‘எப்’ பிரிவில் நெதர்லாந்து அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சுவீடன் அணியை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை…

1 Min Read
விளையாட்டு

IPL 2026: ஓரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய சிஎஸ்கே வீர ஜெமி ஓவர்டன்.. தடுமாறிய லக்னோ அணி

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டியில், சிஎஸ்கேயின் ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டன் அபாரமாகப் பந்துவீசி ஆட்டத்தின் போக்கை…

1 Min Read
ஐபிஎல் 2026Uncategorizedவிளையாட்டு

கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த டெல்லி

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?