MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்திய கிரிக்கெட் சரியான திசையில் – ரோகித் சர்மா நம்பிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > இந்திய கிரிக்கெட் சரியான திசையில் – ரோகித் சர்மா நம்பிக்கை
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் சரியான திசையில் – ரோகித் சர்மா நம்பிக்கை

Admin
Last updated: May 24, 2026 12:26 pm
Admin
Share
SHARE

இந்திய கிரிக்கெட் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அணியின் செயல்பாடுகள் மற்றும் வீரர்களின் மனநிலை என இரு தளங்களிலும் இந்த முன்னேற்றம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். உலக கிரிக்கெட்டில் இந்தியா ஒரு வலுவான சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதே தனது முக்கிய நோக்கம் என்றும், அதற்கான சரியான இடத்தில் இந்தியா இருப்பதாக அவர் நம்புவதாகவும் ரோகித் சர்மா குறிப்பிட்டார்.

மும்பை இந்தியன்ஸ் நடத்திய ESA தின நிகழ்வில் பேசிய ரோகித், 'இந்தியா உலக கிரிக்கெட்டின் மாபெரும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. இந்தியாவின் கடந்த மூன்று ஆண்டு கால பங்களிப்புகள் அசாத்தியமானவை. 2024 உலகக் கோப்பை, மகளிர் உலகக் கோப்பை, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் மற்றொரு டி20 உலகக் கோப்பை என பல்வேறு தொடர்களில் அணி சிறப்பாக விளையாடியுள்ளது. எங்களின் வெற்றிக்கான பயணத்தைத் தொடர்வோம் என நம்புகிறேன்' என்று உற்சாகத்துடன் கூறினார். இந்தியாவின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும், வயதுப் பிரிவுகளிலும் கிடைத்த வெற்றிகள், நாட்டின் துடிப்பான கிரிக்கெட் கட்டமைப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.

தனது அறிமுகக் காலத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றங்களையும் ரோகித் சர்மா விளக்கினார். 'நாங்கள் விளையாடத் தொடங்கிய காலகட்டத்தில், 130-140 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோராகக் கருதப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் அது சவாலானது. இப்போது எந்த ஒரு ரன் இலக்கும் போதுமானதாக இல்லை. இது காலப்போக்கில் இந்த விளையாட்டு எப்படி மாற்றமடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது' என்று தெரிவித்தார். மேலும், 'வீரர்கள் மிகுந்த தைரியத்துடனும், திறந்த மனதுடனும் செயல்படுகிறார்கள். இது விளையாட்டு மற்றும் லீக் போட்டிகளுக்கு ஒரு நல்ல அறிகுறி. அவர்கள் பழைய பழைமைவாத நுட்பங்களுக்குள் முடங்காமல், ஒரு படி மேலே சென்று சவால்களை எதிர்கொள்ளத் தயங்குவதில்லை. எதிர்வரும் ஆண்டுகளிலும் இதேபோன்ற அணுகுமுறை தொடரும், இது விளையாட்டை இன்னும் பெரிய தளத்திற்குக் கொண்டு செல்லும்' என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆறு வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் உள்ளனர் என்பதை நான் அறிவேன். அவர்களின் வாழ்க்கையின் இவ்வளவு ஆரம்ப காலகட்டத்தில் அதிக அழுத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் விளையாட்டை ரசிக்க வேண்டும், நண்பர்களுடன் பார்க்கவும் விளையாடவும் வேண்டும். இதுதான் எனக்கும் தொடங்கியது. சூழ்நிலையின் தேவையை உணர்ந்து விளையாட்டை அனுபவிப்பதே முக்கியம். எதையும் செய்யும்படி ஒருவர் உங்களை வற்புறுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார். 'நான் அறிமுகமானதில் இருந்து இன்றுவரை, கற்றுக்கொள்ள நிறைய சூழ்நிலைகள் இருந்தன. இதிலிருந்து நான் எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கான பல வழிமுறைகளை உணர்ந்தேன். விளையாட்டில் எப்போதுமெ ஒரு சீரான பயணம் கிடையாது. சிகரங்கள் மட்டுமல்ல, சரிவுகளும் நிறைய கற்க உதவுகின்றன' என்று அவர் விளக்கினார். இந்திய மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, அணியின் இலக்கே மிக முக்கியம் என்பதை உறுதிப்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்துகொண்டேன். ஒருவர் கேப்டனாக இருக்கும்போது அது வேறு கதை. ஏனெனில் நீங்கள் உங்கள் செயல்திறனைப் பற்றி மட்டும் கவலைப்பட தேவையில்லை. மற்ற வீரர்களின் செயல்திறனையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் சதம் அடித்திருந்தாலும், மற்றவர்கள் சரியாக விளையாட முடியாமல் அணி ஆட்டத்தை இழந்தால் அது கவலையளிக்கும். முடிவுகள் சாதகமாக வரும் வரை உங்களுக்கு நிம்மதி கிடைக்காது' என்று ரோகித் சர்மா விளக்கினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:CricketIndian CricketRohit Sharmaஇந்திய கிரிக்கெட்கிரிக்கெட்ரோகித் சர்மா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article படப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் பரிதாப பலி
Next Article சவுகார்பேட்டை நகைக்கடை அதிபர் வீட்டில் ரூ.5.25 லட்சம், 25 பவுன் திருட்டு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லண்டனில் ஜூன் 4 அன்று தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 15…

1 Min Read
விளையாட்டு

கோலி vs ப்ரார்: தரம்சாலாவில் ஐபிஎல் மோதல் – வைரல் காட்சிகள்!

தரம்சாலாவில் ஐபிஎல் 2026 போட்டியில் விராட் கோலிக்கும் ஹர்ப்ரீத் ப்ராரிற்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2 Min Read
விளையாட்டு

சாய் சுதர்சன் மெகா சாதனை: சேவாக்கை சமன் செய்தார், கோலியை முந்தினார்!

ஐபிஎல் 2026ல் சாய் சுதர்சன், சேவாக்கின் சாதனையை சமன் செய்து, கோலியை முந்தி புதிய மைல்கல் எட்டியுள்ளார். 500 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.

2 Min Read
விளையாட்டு

60 விக்கெட்டுகள் எடுத்தும் இடம் இல்லை? காஷ்மீர் வீரருக்கு அநீதி!

60 விக்கெட்டுகளைக் கைப்பற்றியும், ரஞ்சி டிராபியில் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும், காஷ்மீர் வீரர் அக்கிப் நபி இந்திய அணியில் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?