MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: படப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் பரிதாப பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > க்ரைம் > படப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் பரிதாப பலி
க்ரைம்

படப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் பரிதாப பலி

Admin
Last updated: May 24, 2026 12:22 pm
Admin
Share
SHARE

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே மாடம்பாக்கம் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு பைக்குகளில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர், மாடம்பாக்கம் அன்னை சத்தியா நகரைச் சேர்ந்த செல்வகுமார் (30). இவர் தி.நகரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல நேற்று அதிகாலை தனது வீட்டில் இருந்து வேலைக்குக் கிளம்பியுள்ளார். காலை சுமார் 7 மணியளவில், கூடுவாஞ்சேரி சாலையில் தனது பைக்கில் மாடம்பாக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மாடம்பாக்கம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த நவீன் (25) என்ற தனியார் நிறுவன ஊழியர், இரவுப் பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பி வந்துள்ளார். மாடம்பாக்கம் பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக இருவரும் ஓட்டி வந்த பைக்குகள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இருவரும் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து, விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இருவரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான இருசக்கர வாகனங்களைக் கைப்பற்றி, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Road AccidentTamil Naduகாஞ்சிபுரம்சாலை விபத்துதமிழ்நாடுபடப்பை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீலகிரியில் சாலையை கடந்து சென்ற புலி: வாகன ஓட்டிகள் பீதி
Next Article இந்திய கிரிக்கெட் சரியான திசையில் – ரோகித் சர்மா நம்பிக்கை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

க்ரைம்

காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது

கோவையில், காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

1 Min Read
தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பள்ளிகள் திறப்பை ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் நலனே…

1 Min Read
இந்தியா

ஆந்திராவில் சோகம்: லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில், கொவ்வூர் அருகே வேலைக்குச் சென்றுகொண்டிருந்த 4 பெண் கூலித் தொழிலாளர்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 Min Read
அரசியல்

சிறைச்சாலை பதிவேடுகள் கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு

புழல் மத்திய சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், சிறைச்சாலை பதிவேடுகளை கணினிமயமாக்க உத்தரவிட்டார். போதைப்பொருள் தடுப்பு, உள் சந்தை அமைத்தல் குறித்தும் அறிவுறுத்தினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?