ஐபிஎல் 2026 சீசனில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, இறுதிப்போட்டிக்கு ஐந்தாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. தர்மசாலாவில் நடைபெற்ற முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட ஆர்சிபி, 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்த முடிவு தவறானது. ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 7 பந்துகளில் 19 ரன்களும், விராட் கோலி 25 பந்துகளில் 43 ரன்களும், தேவுதத் படிக்கல் 19 பந்துகளில் 30 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ரஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் அரை சதம் அடித்து, 33 பந்துகளில் 9 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குர்ணல் பாண்டியா 28 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஜித்தேஷ் சர்மா 5 பந்துகளில் 15 ரன்கள் எடுக்க, ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராகும்.
255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர் சாய் சுதர்சன் 14 ரன்களிலும், சுப்மன் கில் 2 ரன்களிலும், நிசாந்த் சிந்து 5 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜாஸ் பட்லர் 11 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். இதனால் குஜராத் அணி 65 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ராகுல் திவாட்டியா மட்டும் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார். இருப்பினும், குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, ஐந்தாவது முறையாகவும், தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு, எலிமினேட்டரில் சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் வெற்றியாளருடன் மோதும் இரண்டாவது வாய்ப்பு உள்ளது.