MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: “ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > “ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்
விளையாட்டு

“ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்

Admin
Last updated: May 9, 2026 9:29 pm
Admin
Share
SHARE

ராய்ப்பூர்: ஆர்சிபி அணியில் விளையாடுவதால் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் பேட்டிங் உட்பட எனது ஆட்டத்திறன் மேம்பட்டுள்ளது என அந்த அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல் தெரிவித்துள்ளார்.

22 வயதான ஜேக்கப் பெத்தெல், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் என மூன்று பார்மெட்டிலும் முக்கிய வீரராக உள்ளார். பேட்டிங் ஆல்ரவுண்டரான அவர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், 48 பந்துகளில் 105 ரன்களை விளாசி அசத்தி இருந்தார். தற்போது ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் 2026 சீசனில் விளையாடி வருகிறார்.

தற்போது காயமடைந்த பிலிப் சால்டுக்கு மாற்றாக ஆடும் லெவனில் ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், அவர் பெஞ்சில் அமர்ந்து இருப்பதற்கு பதிலாக இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடலாம் என இங்கிலாந்து முன்னாள் வீரர் அலஸ்டர் குக் கடந்த மாதம் விமர்சித்திருந்தார். ஆனால், அதை மறுத்த மற்றொரு இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்ட வீரர்களுடன் ஆக்கப்பூர்வமான நேரத்தை செலவிடும் வாய்ப்பை பெத்தெல் பெறுவார். அது அவருக்கு பயன் தரும் என்றார்.

“ஒவ்வொருவரும் வித்தியாசமான கருத்தை கொண்டிருப்பது உண்டு. ஆனால், எனது பார்வையில் நான் சரியான முடிவை எடுத்துள்ளேன் என கருதுகிறேன். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும் கிரிக்கெட் தொடர் இது. அந்த வகையில் இதில் விளையாடுவது எனது கிரிக்கெட் கரியரை பாதிக்காது.

ஆர்சிபி அணியில் விளையாடுவதால் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் பேட்டிங் உட்பட எனது ஆட்டத்திறன் மேம்பட்டுள்ளது. இந்த சீசனில் நான் எதிர்பார்த்த அந்த தொடக்கம் எனக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் கவனம் செலுத்தி வருகிறது. அது சார்ந்து தீவிர பயிற்சியும் மேற்கொண்டுள்ளேன்” என ஜேக்கப் பெத்தெல் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கம்
Next Article ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: சுப்மன் கில், சாய் சுதர்சன் வரலாற்று சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்திய ஜோடி

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் ஐபிஎல் வரலாற்றில் 2500 ரன்களைக் கடந்த கூட்டணி என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர்.…

2 Min Read
விளையாட்டு

CSK vs LSG: 13 பந்துகளில் சிஎஸ்கே வீரர் உர்வில் பட்டேல் அரைசதம்.. 7 சிக்சர்கள் பறக்கவிட்ட அசத்தல்

லக்னோ: ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் அடித்த ஜெய்ஸ்வாலின் சாதனையை சமன் செய்து, உர்வில் படேல் தனது பெயரை வரலாற்றில் இடம்பெறச் செய்தார். இதன் மூலம்…

1 Min Read
விளையாட்டு

LSG vs RCB: 2 வீரர்களை வெளியேற்றிய ரிஷப் பண்ட்.. லக்னோ, ஆர்சிபி பிளேயிங் 11 என்ன?

லக்னோ: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான 50-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: மாடல் அழகிகளை வைத்து ஹனி டிராபிங்.. பிசிசிஐ கடும் எச்சரிக்கை.. இ- சிகரெட்க்கும் தடை

ஐபிஎல் தொடரில் விதிமீறல்கள் தொடர்பாக அனைத்து 10 அணிகளுக்கும் பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். வீரர்கள் அறைகளில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவது, அணி…

4 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?