பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு என நயாரா நிறுவனம் அறிவித்துள்ளது. தனியார் எண்ணெய் நிறுவனமான நயாரா, தனது பங்க்-களில் இந்த விலைக் குறைப்பை மேற்கொண்டுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிவை அடுத்து இந்த புதிய விலை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட தட்டுப்பாட்டின் போது விலைகள் உயர்த்தப்பட்டிருந்தன. தற்போது விநியோகம் சீரடைந்துள்ளதால், நயாரா நிறுவனம் விலைக் குறைப்பை மேற்கொண்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பு, நாடு முழுவதும் உள்ள நயாரா நிறுவனத்தின் சுமார் 7,000 எரிபொருள் நிலையங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நுகர்வோருக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.