மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) பரபரப்பு புகார் ஒன்றை முன்வைத்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவின் மாமனார் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் செயலர் விஜயபாஸ்கர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் இடமாற்றத்தில் பெருந்தொகை கைமாறியுள்ளதாகவும், இதில் அமைச்சரின் மாமனார் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் விசிக குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி கூறுகையில், 'அமைச்சர் ராஜீவின் மாமனார் விஜயபாஸ்கர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலராக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் தற்போது நடைபெறும் இடமாற்ற ஊழலின் பின்னணியில் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்த இடமாற்றங்களில் பெருந்தொகை கைமாறியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்து நடைபெறவிருக்கும் இடமாற்றங்களிலும் அதிகார துமிஷ்பிரயோகம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு, 'ஊழலற்ற ஆட்சி' என்ற தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் எஸ்.எஸ்.பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் விசிகவின் இந்த திடீர் புகார், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.