பப்பாளி பழம் பல நன்மைகளை அளித்தாலும், சிலருக்கு இது ஆபத்தாகவும் முடியலாம். யாருக்கு பப்பாளி தீங்கு விளைவிக்கும் என்பதை விரிவாக காண்போம். சில குறிப்பிட்ட நபர்கள் பப்பாளி பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி தவறி சாப்பிட்டால், அது உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும்.
அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் பப்பாளி பழத்தை அதிகமாக உட்கொண்டால், காயங்கள் ஆறுவதை தாமதப்படுத்தும். இதய நோய் உள்ளவர்கள் அதிகளவில் பப்பாளி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மேலும், பப்பாளியில் உள்ள பப்பேன் நொதி சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சுவாசப் பிரச்சனைகளை உண்டாக்கி ஆரோக்கியத்தை பாதிக்கும்.
கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழத்தை தவிர்ப்பது நல்லது. அதிகமாக உட்கொண்டால் அது கருவுறுதலை பாதிக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். அறியாமல் கர்ப்பிணிகள் பப்பாளி அதிகம் சாப்பிட்டால், சவ்வுகளை சேதப்படுத்தி கருக்கலைப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.
சிலர் அதிகமாக பப்பாளி சாப்பிடும்போது, நரம்பு மண்டலத்தில் அழுத்தம் ஏற்படலாம். மேலும், தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், தலைவலி போன்ற பக்கவிளைவுகளும் சிலருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பப்பாளியின் நன்மைகளை அறிந்தாலும், அதன் ஆபத்துகளையும் உணர்ந்து செயல்படுவது அவசியம்.