MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பத்மினி ஏகாதசி: குழந்தை பாக்கியம் தரும் விரதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆன்மிகம் - பத்மினி ஏகாதசி: குழந்தை பாக்கியம் தரும் விரதம்

ஆன்மிகம்

பத்மினி ஏகாதசி: குழந்தை பாக்கியம் தரும் விரதம்

Admin
Last updated: மே 26, 2026 10:56 மணி
Admin
Share
SHARE

பெருமாளின் அருளைப் பெற உகந்த விரதங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ஏகாதசி விரதம், செல்வச் செழிப்பையும் வாழ்விற்குப் பின் மோட்சத்தையும் அருளும் என்பது ஐதீகம். மாதத்திற்கு இரண்டு முறை வரும் ஏகாதசிகளில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அதிக மாதத்தில் வரும் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு பத்மினி ஏகாதசி என்று பெயர். கமலா ஏகாதசி, அதிக ஏகாதசி, புருஷோத்தம ஏகாதசி போன்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியன்று விரதம் இருந்து பகவானை வழிபட்டால், அதிக புண்ணியங்கள் கிடைக்கும்.

பத்மினி ஏகாதசியில் விரதம் இருப்பது, பல ஆண்டுகள் தவம் மற்றும் யாகங்கள் செய்ததற்கு இணையான பலனைத் தரும் என பத்ம புராணம் கூறுகிறது. ஸ்கந்த புராணத்தின்படி, அஸ்வமேத யாகம் செய்ததற்கு இணையான பலனை இந்த விரதம் அளிக்கும். இது பாவங்களை நீக்குவதுடன், முக்தியையும் அருளக் கூடியது. குறிப்பாக, குழந்தைப்பேறு வேண்டி விரதம் இருப்பவர்களுக்கு இது மிக அற்புதமான பலனைத் தரக்கூடிய நாளாகும்.

இந்த விரதத்தின் மகிமைகள் குறித்து பகவான் கிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் விளக்கமாக கூறியுள்ளார். 'இந்த ஏகாதசி மற்ற ஏகாதசிகள் போன்று கிடையாது. பிரம்மதேவரால்கூட இதன் சிறப்பை முழுமையாக விவரிக்க முடியாது. இந்த ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கும் பக்தர்களுக்கு எனது மிகச்சிறந்த கருணை நிச்சயம் கிடைக்கும். அவர்கள் எனது முழுமையான கருணை மற்றும் திருவருளுக்கு பாத்திரமாகிறார்கள்' என கிருஷ்ணர் தெரிவித்தார்.

விரத முறைப்படி, பக்தர்கள் முழு விரதம் இருக்க வேண்டும். தானியங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். முழு விரதம் இருக்க முடியாதவர்கள், பசும்பால் மற்றும் தண்ணீர் அருந்தி விரதத்தை கடைப்பிடிக்கலாம். முந்தைய நாளான தசமி தினத்தில் இருந்தே விரதத்தைத் தொடங்க வேண்டும். தசமி அன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாகவே உணவை முடித்துவிட வேண்டும். மறுநாள் ஏகாதசியன்று அதிகாலை நீராடி, பூஜை செய்ய வேண்டும். துவாதசியன்று காலையில் நீராடி, நிவேதனம் செய்து பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என கிருஷ்ணர் வழிகாட்டுகிறார்.

பத்மினி ஏகாதசியின் சிறப்பு குறித்து புலஸ்திய முனிவர், நாரதருக்கு கூறியதையும் கிருஷ்ணர் நினைவுகூர்ந்தார். சக்தி வாய்ந்த ராவணன், மன்னர் கார்த்தவீரியார்ஜுனனிடம் தோற்றதற்குக் காரணம், கார்த்தவீரியாஜுனனின் தாயான பத்மினி தேவி, அதிக மாதத்தில் ஏகாதசி விரதம் இருந்து பகவானை வழிபட்டதே என்று புலஸ்திய முனிவர் விளக்கினார். பத்மினி தேவி ஏகாதசி விரதம் இருந்து பகவானின் அருளால் பெற்றெடுத்த குழந்தை என்பதால் கார்த்தவீரியாஜுனன் அதிக சக்தி கொண்டிருந்தான். இதனால், பக்தி மட்டுமல்ல பௌதிக விஷயங்களிலும் வெற்றியை கொடுக்கக்கூடிய பத்மினி ஏகாதசி நாளை (27.5.2026) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து பகவானை மனதார வழிபட்டால், பகவானின் அருள் கிடைப்பதுடன், பக்தியில் உள்ள தடைகளும் நீங்கும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ekadashi FastingPadmini Ekadashiஏகாதசி விரதம்பத்மினி ஏகாதசிபெருமாள் வழிபாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: ரஜத்தின் அதிரடி சதம்! ஆர்சிபி மெகா ஸ்கோர்!
Next Article மதுரை உசிலம்பட்டியில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

நெல்லை தொண்டர் நயினார் கோவில் கும்பாபிஷேக விழா
ஆன்மிகம்

நெல்லை தொண்டர் நயினார் கோவில்: நூற்றாண்டு விழா கும்பாபிஷேகம்

நெல்லை தொண்டர் நயினார் சிவன் கோவிலில், நூற்றாண்டு பழமையான கோவிலில் விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

1 Min Read
ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 மே 2026: திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்

பராபவ ஆண்டு, சித்திரை-27 (ஞாயிற்றுக்கிழமை) நட்சத்திரம் : அவிட்டம் இரவு 9.01 வரை பிறகு சதயம் ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி…

1 Min Read
ஆன்மிகம்

மே 14, 2026: பிரதோஷ சிறப்பு, பல ராசிகளுக்கு லாபம்!

மே 14, 2026 அன்று நடைபெறும் பிரதோஷம், குருவார திருமஞ்சனம் மற்றும் ராசிபலன்கள் குறித்த விரிவான தகவல்கள். பல ராசிகளுக்கு லாபம் மற்றும் மகிழ்ச்சி காத்திருக்கிறது.

2 Min Read
ஆன்மிகம்

திருப்பதி: ஒரே டிக்கெட்டில் 3 நாட்கள் சிறப்பு தரிசனம்! ஆகஸ்ட் 21 முதல் முன்பதிவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் 23-25 வரை நடைபெறும் பவித்ரோற்சவ விழாவில் பங்கேற்க, ரூ.5000 செலுத்தி சிறப்பு தரிசன டிக்கெட் பெறலாம். ஆகஸ்ட் 21 முதல் ஆன்லைனில்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?