MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பணம் இல்லாததால் மூதாட்டி உடலை மூட்டைக் கட்டி வீசிய முதியவர்: சென்னையில் அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > க்ரைம் > பணம் இல்லாததால் மூதாட்டி உடலை மூட்டைக் கட்டி வீசிய முதியவர்: சென்னையில் அதிர்ச்சி
க்ரைம்

பணம் இல்லாததால் மூதாட்டி உடலை மூட்டைக் கட்டி வீசிய முதியவர்: சென்னையில் அதிர்ச்சி

Admin
Last updated: May 24, 2026 3:26 pm
Admin
Share
SHARE

சென்னையில் பணம் இல்லாததால், உயிரிழந்த தனது மனைவியின் உடலை மூட்டைக் கட்டி சாலையோரம் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலம் அருகே சாலையோரம் கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சாக்கு மூட்டையை சோதனையிட்டபோது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலமாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (75) என்பதும், அவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதும் தெரியவந்தது.

பாக்கியலட்சுமிக்கு பத்து பிள்ளைகள் இருந்தும், யாரும் அவரை கவனிக்க முன்வரவில்லை என்றும், அவர் பூ வியாபாரம் மற்றும் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்த முகமது அசன் (63) என்பவருடன் பழக்கத்தின் பேரில் வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முகமது அசன் வேலை பார்த்து வந்த ஓட்டல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டதால், அவரும் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் பாக்கியலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால், சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசியதாக முதியவர் முகமது அசன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர்கள் யாராவது உடலை எடுத்து அடக்கம் செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார். இது குறித்து பல்லாவரம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:உடல்சம்பவம்சென்னைபணம்போலீஸ்முதியவர்மூதாட்டி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கூட்டணி ஆட்சிக்கு ராமதாஸ் வரவேற்பு: புதிய அரசியல் பண்பாட்டிற்கு அழைப்பு
Next Article பெங்களூருவில் 100 ஏக்கரில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்: முதல்-மந்திரி அடிக்கல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

க்ரைம்

காதலித்த வாலிபரை உறவினர்கள் கொடூரமாக கொலை: குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

நெல்லை களக்காடு அருகே இளம்பெண்ணை காதலித்ததால் உறவினர்களால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை முழுமையாக கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த வாலிபரின் தாய் மாவட்ட ஆட்சியரிடம்…

1 Min Read
க்ரைம்

திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்: பயணிகள் அலறல்!

திருவாரூர் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயணிகள் அலறியடித்து மீட்கப்பட்டனர். திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 Min Read
க்ரைம்

தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில், தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர் ஏற்கனவே…

1 Min Read
க்ரைம்

செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது

சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய் மோசடி செய்த மருத்துவமனை ஊழியர் ஒருவரை ஆவடி மத்திய…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?