சென்னை அண்ணா நகரில், திமுக எம்.பி. கலாநிதி வீராச்சாமியின் மகன் சித்தார்த் மற்றும் திமுக கவுன்சிலர் ராணி, எம்.பி.யின் உதவியாளர் ஆசை தம்பி, நாராயணன் ஆகியோர் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூரைச் சேர்ந்த அன்புக்கரசு என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த அன்புக்கரசு, சென்னை அண்ணா சாலையில் உள்ள தனது 14 கிரவுண்ட் நிலத்தின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்றதாகவும், ஆனால் பணம் தராமல் ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மோசடி தொடர்பாக அவர் 2024 ஆம் ஆண்டில் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், நீண்ட விசாரணைக்குப் பிறகு, அண்ணா நகர் போலீசார் சித்தார்த், ராணி, ஆசை தம்பி, நாராயணன் ஆகிய நான்கு பேர் மீது மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அன்புக்கரசுவின் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குப்பதிவு திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான மேல்விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.