திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளிமுத்து என்பவர் தனது மூத்த மகன் சின்னராஜ் (12) மற்றும் இளைய மகன் ஜெயராஜ் (5) ஆகியோருடன் நெல்லிக்காய் பறிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் காரில் வந்து காளிமுத்துவின் வாகனம் மீது மோதி அவரை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக வெட்டியுள்ளது. இதில், காளிமுத்துவின் தலையை மட்டும் நெடுஞ்சாலையின் நடுவே வைத்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. இந்த கொடூர சம்பவத்தில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும், மூத்த மகன் சின்னதுரை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் பாண்டியன் என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக காளிமுத்து சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது, காளிமுத்துவின் தலையை அறுத்து எடுத்துச் சென்ற கும்பல், மூலச்சி ஊருக்குள் வைத்துச் சென்றது. இந்த கொடூர கொலை கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
You Might Also Like
ரூ. 2 கோடி காப்பீட்டு பணத்திற்காக கணவனை கொன்ற மனைவி
ரூ. 2 கோடி காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, போலியான ஆவணங்களைத் தயாரித்து, தனது கணவனை விஷ ஊசி போட்டு கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை…
1 Min Read
கோவை சிறுமி கொலை: கைதி நாடகத்தால் பரபரப்பு
கோவை சிறுமி கொலை வழக்கில் கைதி ஒருவர், கொலையை நடித்துக் காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
1 Min Read
ஒரே குடும்பத்தில் மூன்று குழந்தைகள் ஒரே நாளில் பிறந்த அதிசயம்!
நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில், ஒரே மருத்துவரால் சுகப்பிரசவமாகப் பிறந்து உலக சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளனர்.
1 Min Read
நடத்துனர் பணி பறிப்பு: கண்ணீருடன் ஆட்சியரிடம் தற்காலிக நடத்துனர் முறையீடு
நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஜாதியப் பாகுபாடு காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தற்காலிக நடத்துநர் தம்பிதுரை கண்ணீருடன் புகார். தூய்மைப் பணி தருவதாக அதிகாரிகள் கூறுவதாக வேதனை.
1 Min Read
