திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளிமுத்து என்பவர் தனது மூத்த மகன் சின்னராஜ் (12) மற்றும் இளைய மகன் ஜெயராஜ் (5) ஆகியோருடன் நெல்லிக்காய் பறிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் காரில் வந்து காளிமுத்துவின் வாகனம் மீது மோதி அவரை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக வெட்டியுள்ளது. இதில், காளிமுத்துவின் தலையை மட்டும் நெடுஞ்சாலையின் நடுவே வைத்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. இந்த கொடூர சம்பவத்தில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும், மூத்த மகன் சின்னதுரை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் பாண்டியன் என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக காளிமுத்து சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது, காளிமுத்துவின் தலையை அறுத்து எடுத்துச் சென்ற கும்பல், மூலச்சி ஊருக்குள் வைத்துச் சென்றது. இந்த கொடூர கொலை கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
You Might Also Like
சண்டிகரில் மெடிக்கல் ஷாப் காசாளர் 13 குண்டுகள் பாய்ந்து கொலை
சண்டிகர் செக்டர் 11ல் உள்ள மெடிக்கல் கடையில் காசாளர் ஜான்கி, மர்ம நபர்களால் 13 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து…
1 Min Read
மனைவி மீது சந்தேகம்: 9 மாத குழந்தையை கொன்ற தந்தை!
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட தந்தை, குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி 9 மாத குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
1 Min Read
ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு: அதிர்ச்சியில் மக்கள்
ராமநாதபுரத்தில் வீட்டு திண்ணையில் தூங்கிய 5 வயது சிறுமி, பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ்…
1 Min Read
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் கொடூர கொலை!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் 17 வயது சிறுவன் குபேந்திரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
1 Min Read