திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளிமுத்து என்பவர் தனது மூத்த மகன் சின்னராஜ் (12) மற்றும் இளைய மகன் ஜெயராஜ் (5) ஆகியோருடன் நெல்லிக்காய் பறிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் காரில் வந்து காளிமுத்துவின் வாகனம் மீது மோதி அவரை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக வெட்டியுள்ளது. இதில், காளிமுத்துவின் தலையை மட்டும் நெடுஞ்சாலையின் நடுவே வைத்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. இந்த கொடூர சம்பவத்தில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும், மூத்த மகன் சின்னதுரை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் பாண்டியன் என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக காளிமுத்து சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது, காளிமுத்துவின் தலையை அறுத்து எடுத்துச் சென்ற கும்பல், மூலச்சி ஊருக்குள் வைத்துச் சென்றது. இந்த கொடூர கொலை கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
You Might Also Like
என்ஜினீயரிங் மாணவி தற்கொலை: ஒடிசா மந்திரியின் மருமகன் கைது
சென்னையில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஒடிசா அமைச்சர் ஒருவரின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 Min Read
சொந்த மகளையே ஆணவக் கொலை செய்த தந்தை: ஆக்ராவில் அதிர்ச்சி
ஆக்ராவில், குடும்ப எதிர்ப்பை மீறி ராணுவ வீரரை திருமணம் செய்த 24 வயதுப் பெண், தந்தையால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை கைது…
1 Min Read
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த சூட்கேஸில், தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலையானவர் அமீர் அலி என்றும்,…
1 Min Read
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
சென்னை மதுரவாயலில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கி போக்சோ…
1 Min Read

