நீட் தேர்வு விண்ணப்ப தொகை: மே 27 வரை வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றலாம்

நீட் தேர்வு விண்ணப்பத் தொகையை திரும்பப் பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது வங்கி விவரங்களை வரும் மே 27 ஆம் தேதி வரை பதிவேற்றலாம் என தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அறிவித்துள்ளது.

வினாத்தாள் கசிவு காரணமாக இந்த மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக, வரும் ஜூன் 21 ஆம் தேதி புதிய தேர்வு நடைபெறும் என்றும் என்.டி.ஏ ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தில், விண்ணப்பத் தொகையை திரும்பப் பெறுவதற்கான வங்கி விவரங்களை மே 27 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை பதிவேற்றலாம். தேர்வர்களின் பெயர், வங்கியின் பெயர், கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோட் மற்றும் ரத்து செய்யப்பட்ட வங்கி காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் ஆகியவற்றை இதில் பதிவு செய்ய வேண்டும்.

மே 27 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை பதிவேற்றப்படும் தகவல்களே இறுதியானவை என்றும், அதன் பிறகு எந்த மாற்றங்களும் ஏற்கப்படாது என்றும் என்.டி.ஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version