மேகதாது அணை: தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்நிலையில், மேகதாது அணை திட்ட விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மட்டுமே கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக கூறி, வழக்கை முடித்து வைத்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த தீர்ப்பு தொடர்பான விவரங்கள் நேற்றுதான் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இது தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், 'மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத்தின் கடந்த நவம்பர் 13-ஆம் தேதியிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம், மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது கர்நாடக அரசுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக விவசாயிகளின் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version