பண்டிகை நாட்கள் அல்லது விசேஷ நாட்களில் மாதவிடாய் வந்துவிடக்கூடாது என பெண்கள் நினைப்பதுண்டு. இதை தள்ளிப்போட சில எளிய இயற்கை வழிகள் உள்ளன. குறிப்பாக வெந்தயம், வெள்ளரி, பொட்டுக்கடலை மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை இதற்கு பெரிதும் உதவும்.
மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்பிருந்தே பெண்கள் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தால், மாதவிடாயை தள்ளிப்போட முடியும். இது ஒரு சிறந்த பலன் தரும் இயற்கை முறையாகும்.
அதேபோல், வெள்ளரிப் பிஞ்சுகளை சாப்பிடுவதும் உடல் சூட்டைக் குறைத்து மாதவிடாயைத் தள்ளிப்போட உதவும். காலையில் எழுந்தவுடன் ஒரு பிடி பொட்டுக்கடலையை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால், மாதவிடாயை தாமதப்படுத்தலாம்.
மேலும், அதிக அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சை சாறும் மாதவிடாயைத் தள்ளிப்போட உதவும் என கூறப்படுகிறது. இந்த இயற்கை முறைகளைப் பின்பற்றி பெண்கள் தங்கள் முக்கிய நாட்களில் மாதவிடாய் வருவதைத் தவிர்க்கலாம்.