தமிழக மின்சார வாரிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக, ஒரே நேரத்தில் 300 உதவி பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 2000 முதல் 2002 ஆம் ஆண்டு வரை உதவி பொறியாளர்களாக (மின்னியல்) பணியில் சேர்ந்த தகுதியுடைய 379 பேரில், முதற்கட்டமாக 300 பேருக்கு இந்த பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கிலும், தகுதியுடைய பொறியாளர்களுக்கு வெளிப்படையான முறையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இது வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு பெரிய அளவில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பது மின்வாரிய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த பதவி உயர்வுகள் அனைத்தும் தகுதி மற்றும் வாரிய விதிமுறைகளின் அடிப்படையில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டுள்ளன. எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் சீரிய நடவடிக்கையால், நீண்டகாலமாக பதவி உயர்வுக்காக காத்திருந்த பொறியாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் பணியாளர் நலன் சார்ந்த அணுகுமுறையின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர். இந்த பதவி உயர்வுகள் ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துவதோடு, மின்வாரியத்தின் செயல்திறனையும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.