நீட் 2026 மறுதேர்வுக்கான வினாத்தாள் கசிந்துவிட்டதாகவும், அவை விற்பனை செய்யப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என தேசிய தேர்வு முகமை (NTA) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்கள் இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் NTA எச்சரிக்கை விடுத்துள்ளது. நீட் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் அங்கீகரிக்கப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவும் இதுபோன்ற தவறான தகவல்கள் மாணவர்களிடையே தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்வு முகமை கடுமையாக எச்சரித்துள்ளது.
எனவே, நீட் தேர்வு குறித்த நம்பகமான தகவல்களுக்கு தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே அணுகுமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.