MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது

இந்தியா

திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது

Admin
Last updated: மே 27, 2026 12:32 மணி
Admin
Share
SHARE

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், திருமணத்திற்கு மணப்பெண்களை ஏற்பாடு செய்து தருவதாக கூறி 42 குடும்பத்தினரை ஏமாற்றிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். முகேஷ் பைரங்​கி மற்றும் சுனிதா தம்பதி, திருமண வரன் மையம் நடத்தி வந்துள்ளனர். ஆனால், பெரும்பாலும் வரன் பார்த்து தராமல், மணப்பெண் விவரம் கேட்டு வருபவர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

சமீபத்தில், ஒரு பெரிய கூட்டுத் திருமணத்தை நடத்தப் போவதாக கூறி, 42 மணமகன் வீட்டார்களிடம் இருந்து தலா ரூ.12 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் பெற்றுள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை அவர்கள் பெற்றுள்ளனர். அதிக வயது காரணமாக திருமணம் ஆகாமல் விரக்தியில் இருந்த குடும்பத்தினரை கண்டறிந்து, அவர்களுக்கு மணப்பெண் ஏற்பாடு செய்து தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.

மணப்பெண்கள் அனைவரும் இந்தூரில் உள்ள ஒரு அனாதை விடுதியில் வளர்ந்தவர்கள் என்று கூறி, இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களை காட்டியுள்ளனர். மே 24 ஆம் தேதி தேவாஸில் உள்ள ராதாகஞ்ச் கிளப் வளாகத்தில் திருமணம் நடைபெறும் என்றும், மணப்பெண் குடும்பத்தார் அனைவரும் அங்கு வந்து சேருமாறும் முகேஷ், சுனிதா கூறியுள்ளனர். ஆனால், அன்று காலை ராதாகஞ்ச் கிளப் வந்தபோது, திருமணத்திற்கான எந்த ஏற்பாடுகளும் நடைபெறவில்லை என்பதையும், மணப்பெண்கள் யாரும் இல்லை என்பதையும் கண்டு மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து கேட்டபோது, மணப்பெண்கள் இந்தூரில் இருந்து கிளம்பிவிட்டதாகவும், விரைவில் வந்து சேர்ந்து விடுவர் என்றும் முகேஷ், சுனிதா சமாளித்துள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை காத்திருந்தும் யாரும் வராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணமகன் வீட்டார், முகேஷ், சுனிதா தம்பதி மீது புகார் அளித்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:FraudMadhya Pradeshகைதுதிருமணம்மத்திய பிரதேசம்மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தொடர்ந்து 3வது நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் புதிய விலை என்ன?
Next Article அதிமுகவில் சமரசம்: எடப்பாடி பழனிசாமி – சிவி சண்முகம் அணி இணைகிறதா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

பெங்களூருவில் 100 ஏக்கரில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்: முதல்-மந்திரி அடிக்கல்

பெங்களூரு அருகே சூர்யாநகரில் 100 ஏக்கரில் ரூ.943.46 கோடியில் 80 ஆயிரம் இருக்கைகளுடன் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படுகிறது. முதல்-மந்திரி சித்தராமையா அடிக்கல் நாட்டினார்.

1 Min Read
இந்தியா

போஜ்சாலா தீர்ப்பு: வாராணசி, மதுரா வழக்குகளில் தாக்கமென்ன?

மத்திய பிரதேச போஜ்சாலா வளாகம் சரஸ்வதி தேவி கோயில் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், வாராணசி, மதுரா போன்ற வழக்குகளில் இதன் தாக்கம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2 Min Read
இந்தியா

மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 23 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 Min Read
இந்தியா

வெளிநாட்டு நிதியை ஈர்க்க RBI அதிரடி அறிவிப்பு!

வெளிநாட்டு நிதியை ஈர்க்கும் நோக்கில், RBI ஆனது FCNR(B) மற்றும் NRE டெபாசிட்களுக்கான வட்டி விகித உச்சவரம்பை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இது வங்கிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?