நெல்லை பாளையங்கோட்டையில், டிரைவரான மணிகண்டன் (24) என்பவர், திருமணமான 42 வயது பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பெண்ணுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் உள்ளார். நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய இந்த உறவில், மணிகண்டன் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மாணவியின் கண்முன்னே இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
மேலும், அடங்காத ஆசையால் மணிகண்டன், அந்த பெண்ணின் 14 வயது மகளிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். தாய் கண் முன்னே மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் தாய் இதை தட்டிக்கேட்கவில்லை.
இதுகுறித்து மாணவி தனது மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தாய் மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு, அவரது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
