சாதாரணமாக இலவசமாகக் கிடைக்கும் மா மர இலைகள், பல நோய்களைத் துரத்தும் ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மா இலைகளின் பங்கு மகத்தானது. சிலருக்கு சர்க்கரை அளவு குறையாமல் இருக்கும் நிலையில், மா மர இலைகளில் உள்ள பைட்டோகெமிக்கல் எனும் வேதிப்பொருள், நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை அளிக்க உதவுகிறது. இதனால், மா மர இலைகளை உலர்த்திப் பொடி செய்து பயன்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் குணமாகும் என நம்பப்படுகிறது. மேலும், இந்த மாமர இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரும் நீரிழிவு நோயிலிருந்து நம்மைக் காக்க வல்லது. ஒரு கப் தண்ணீரில் மாமர இலைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அந்தத் தண்ணீரைக் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகினால் நல்ல பலன் கிடைக்கும். இது சர்க்கரை நோய்க்கு மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மா இலைகள் உதவுகின்றன. உயர் ரத்த அழுத்த எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளதால், இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. மா மர இலைகள் இரத்த நாளங்களை வலுப்படுத்தவும், சேதமடைந்த நரம்புகளை ஆரோக்கியப்படுத்தவும் உதவுகின்றன. மாங்காய் இலைகளில் உள்ள மாங்கிஃபெரின் என்ற பைட்டோ கெமிக்கல், நம் உடலில் உண்டாகும் பதட்டத்தைக் குறைத்து மன அமைதியைத் தரக்கூடியது. இதுமட்டுமின்றி, மா மர இலைகள் சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பைக் கற்களைக் கரைக்கும் ஆற்றல் கொண்டவை என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு பல மருத்துவ குணங்களைக் கொண்ட மா இலைகளைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பேணலாம்.
You Might Also Like
இலைக் கட்சி எம்எல்ஏக்களை ‘இழுத்து வர’ முடியுமா? | உள்குத்து உளவாளி
“யாரிடமும் குதிரை பேரம் பேசவேண்டிய அவசியல் இல்லை” என்று விசில் பார்ட்டி விளக்கம் கொடுத்திருக்கும் நிலையில், விசில் பார்ட்டியை அதிகாரத்தில் அமர்த்த புதிதாய் புறப்பட்டு வந்திருக்கும் புரோக்கர்கள்…
1 Min Read
சமையலறை ஃபாயில் பேப்பரால் வைஃபை சிக்னலை கட்டுப்படுத்தலாம்!
சாதாரண சமையலறை ஃபாயில் பேப்பரைக் கொண்டு வைஃபை சிக்னலை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை டார்ட்மவுத் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சிக்னல் கசிவைக் குறைத்து பாதுகாப்பை அதிகரிக்கும்.
2 Min Read
மகரம் ராசி: திருமணத் தடை நீங்கும் வாரம்!
மகரம் ராசிக்காரர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கும் வாரம். குரு பார்வை சாதகமாக இருந்தாலும், ராகு-கேது பெயர்ச்சியால் சர்ப்ப தோஷம் ஏற்படலாம். பண உதவி, பொருள் சேர்க்கை உண்டு.…
1 Min Read
மன்னிப்பு கேட்ட மாஸ்டர் மகேந்திரன்: ‘அப்படி பேசியிருக்கக் கூடாது’
நடிகர் மாஸ்டர் மகேந்திரன், தான் பேசிய சில வார்த்தைகளுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார். 'நான் அப்படி பேசியிருக்கக் கூடாது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 Min Read

