காசாவில் 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது குடும்பத்தினர் 335 தோட்டாக்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இஸ்ரேலிய கமாண்டர் ஒருவர் ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தார். இஸ்ரேலிய படையின் 52வது பட்டாலியன் கமாண்டராக இருந்த லெப்டினன்ட் கர்னல் டோர் கெதாலியா பென் சிம்ஹோன், தெற்கு லெபனானில் நடந்த இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்த் ரஜப் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் இவரே. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது, லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்த இஸ்ரேலிய கமாண்டர் பலியான சம்பவம், காசா போரின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த உயிரிழப்பு, காசா மோதலின் ஒரு பகுதியாக நடைபெறும் தொடர் தாக்குதல்களின் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது இப்பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.