தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
சுகாதாரத் துறையின் உயிர்நாடியாகச் செயல்பட்டு, நோயாளிகளின் நலனுக்காக இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் உழைக்கும் அனைத்து செவிலியர் சகோதர, சகோதரிகளுக்கும் சர்வதேச செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவத் துறையின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னணியில் அமைதியாக உழைக்கும் செவிலியர்களின் சேவை, சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்விற்குப் பெரும் துணையாக நிற்கிறது. அன்பும், இரக்கமும், மனிதநேயமும் நிறைந்த அவர்களின் பணி, எப்போதுமே போற்றுதலுக்குரியது.